இலங்கை 51 பில்லியன் டாலர் கடனுடனும், கடனுக்கான தவணையைச் செலுத்த முடியாத நிலையில் முதல் முறையாகத் திவாலாகியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு உட்பட உலக நாடுகள் அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் பல உதவிகளை அளித்து வருகிறது.
இந்த நிலையில் நாணய மதிப்புச் சரிவு, எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகள் மத்தியில் எரிபொருளுக்கான தீர்வு காண வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்று இலங்கை அரசின் பவர் மற்றும் எனர்ஜி துறை அமைச்சரான காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை முழுவதும் பெட்ரோல் விலை 20-24 சதவீதமும், டீசல் விலை 35-38 சதவீதமும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்டணம், வரி உயர்வு
இதைத் தொடர்ந்து அரசுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டவும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைச் சமாளிக்கவும் இலங்கை அரசு போக்குவரத்து மற்றும் இதர அனைத்து சேவை கட்டணங்களும் அதிகரிக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளதாக டிவிட்டரில் பவர் மற்றும் எனர்ஜி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரத் தெரிவித்துள்ளார்.
வொர்க் ப்ரம் ஹோம்
மேலும் இலங்கையில் எரிபொருள் பயன்பாட்டை நாடு முழுவதும் குறைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களையும் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அளிக்க ஊக்குவித்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க இலங்கை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு லிட்டர் விலை
ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பின் அறிவிக்கப்படும் இரண்டாவது விலை உயர்வு, இன்றைய விலை உயர்வின் மூலம் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் Octane 92 பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 420 ரூபாயும் மற்றும் டீசல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இலங்கையின் வரலாற்று உச்ச விலை.
இலங்கை ரூபாய் மதிப்பு
ஆக்டேன் 92 ரகப் பெட்ரோல் விலை 24.3 சதவீதம் அல்லது 82 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 38.4 சதவீதம் அல்லது 111 ரூபாயும் உயர்த்துவதாக இலங்கை அரசின் எரிபொருள் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் இன்று அறிவித்துள்ளது.
இந்திய ரூபாய்க்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு 4.64 ரூபாயாக உள்ளது.
தமிழ்நாடு அரசு
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு 5.6 மில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி, பால் பவுடர், மருந்துகள் எனப் பல அத்தியாவசிய பொருட்களை அளித்த நிலையில், இன்று இந்திய அரசு கூடுதலாக 40000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது, கடந்த மாதம் ஒன்றிய அரசு எரிபொருளுக்காக 500 மில்லியன் டாலர் அளவிலான கடனுக்கு ஒப்புதல் அளித்தது.
More From GoodReturns

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications