இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிக மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க புதிய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.
முன்னதாக இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் இலங்கை முன்னேப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, ஆனால் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் நிதியமைச்சரின் கருத்து?
இலங்கையின் இறக்குமதியை சார்ந்து பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்கும், அத்தியாவசிய பொருட்களுக்கு நிதியளிப்பதற்கும் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் 2019 இல் வரிகளை கடுமையாகக் குறைத்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு. அரசு விரைவில் புதிய பட்ஜெட்டை வெளியிட்டு வருவாயை அதிகரிக்க வரிகளை உயர்த்தும் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
பிரச்சனையை எதிர்கொள்ள குழுக்கள்
இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு மத்தியில் தற்போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை எதிர்கொள்ளவும், 5 நிதிக் குழுக்களும், 10 மேற்பார்வை குழுக்களும் நியமிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
என்னென்ன குழுக்கள்
இந்த குழுக்கள் பொது நிதிக் குழு, நிதிக் குழு, அக்கவுண்ட்ஸ் கமிட்டி, பொது நிறுவனங்களுக்கான குழு என பல குழுக்கள் அமைக்கப்படும். இந்த 10 குழுக்களும் நாடளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும். இந்த குழுக்களின் பரிந்துரைப் படி நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் முக்கிய பங்கு
இளைஞர்கள் தற்போதுள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். ஆக தற்போதைய பிரச்சனைகளை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். ஆக 15 குழுக்களுக்கும் தலா 4 இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நம்பிக்கை
எது எப்படியோ நெருக்கடியில் உள்ள இலங்கையை மீட்டெடுக்கவும், சரிவில் பொருளாதாரத்தினை வளர்ச்சி காண வேண்டிய திட்டங்களை தீட்டவும், இந்த குழுக்கள் மிக உதவிகரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications