இந்தியாவின் மாபெரும் SAAS நிறுவனங்களில் ஒன்றாகவும், சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு AI உதவியுடன் கோடிங் எழுதும் யுகத்தில் சாஃப்ட்வேர்-ஆஸ்-எ-சர்வீஸ் (SaaS) நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
AI புரட்சிக்கு முன்பே SaaS துறை ஒருங்கிணைப்புக்கு (consolidation) தயாராக இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு கூறி வந்தாக தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்குக்கு பெரும் தொகை செலவழிக்கும் அதே நேரத்தில் இன்ஜினியரிங் மற்றும் ப்ராடெக்ட் மேம்பாட்டுக்கு குறைவாக செலவிடும் மாடல் எப்போதுமே பலவீனமானது.

இதோடு வென்ச்சர் கேப்பிட்டல் மற்றும் பங்குச் சந்தை குமிழ்கள் இந்த தவறான மாடலை நீண்ட காலம் இயங்க செய்தன. AI இப்போது பூதாகரமாக வளர்ந்துள்ள குமிழலை உடைக்கும் ஊசியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பங்குச்சந்தைகள் தற்போது SAAS துறையின் மீது எதிர்மறையான எண்ணத்தை கொண்டு உள்ளது என எச்சரித்தார் ஸ்ரீதர் வேம்பு.
ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த எச்சரிக்கை டிவீட் மிகவும் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்ய. ஏஐ நிறுவனமான அன்த்ரோபிக் நிறுவனம் தனது களாட் AI தேவையில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மெனட் தவிர அனைத்து வேலைகளையும் தானாக செய்யும் AI கருவிகளை அறிமுகப்படுத்தியது மூலம் உலகளவில் டெக் துறை பெரும் பாதிப்பை பங்குச்சந்தையில் எதிர்கொண்டு வருகிறது.
இதனால் இந்திய ஐடி பங்குகள் கடுமையாக சரிந்தன. நிஃப்டி ஐடி குறியீடு 7-8 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. ஒரே நாளில் இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான் ஸ்ரீதர் வேம்பு இன்று இந்த டிவீட்டை வெளியிட்டு உள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடக்கும் SaaSpocalypse-யில் இருந்து ஜோஹோ நிறுவனம் AI அலையை எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளதாக என்ற கேள்விக்கும் ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.
ஜோஹோ நிறுவனம் எந்த அளவுக்கு ஏஐ பயன்படுத்தி, அதை ஏற்றுக்கொண்டு இயங்குகிறதோ, அதன் அடிப்படையில் வளரும் என தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீதர் வேம்பு தனது ஊழியர்களிடம் "நமது மரணத்தை அமைதியாக சிந்திக்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார். மரணத்தை ஏற்றுக்கொள்ளும் போது அச்சமின்றி செயல்பட முடியும் என்றும், அப்போது தான் சரியான பாதையை தெளிவாக தீர்மானிக்க முடியும் என்று கூறி தனது டிவீட்டை முடித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
இந்திய ஐடி துறைக்கு இது குறுகிய கால சரிவு மட்டுமல்ல, கட்டமைப்பு மாற்றத்தின் தொடக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications