இலங்கை தனது சுதந்திரத்திற்குப் பின்பு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், பொறுமையை இழந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நெடுஞ்சாலையை மறித்தும், ரம்புக்கன பகுதியில் ரயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்தியதில், காவல்துறையின் நடவடிக்கையில் போலிசார் துப்பாக்கி சூடு மூலம் ஒருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமுற்றனர். இதன் பின்பு மக்கள் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா, சீனா, ஐஎம்எப் உதவி செய்கிறது.
இந்தியா
இலங்கைக்குத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் இந்தியா உதவ முன் வந்துள்ளது. இலங்கையிடம் போதுமான அன்னிய செலாவணி இல்லாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து நேரடியாகக் கச்சா எண்ணெய் எரிபொருளை வாங்க முடியாது.
500 மில்லியன் டாலர்
இந்த நிலையில் இலங்கையின் முக்கியமான பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் பல முறை டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ள நிலையில், எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இந்தியா கூடுதலாக 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையின் வெளி விவகார அமைச்சர் தெரிவித்தார்.
பங்களாதேஷ்
இந்தியாவைத் தொடர்ந்து பங்களாதேஷ் அரசும், பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்குச் சுமார் 450 மில்லியன் டாலர் அளவிலான ஸ்வாப் பணப் பரிமாற்றத்தை ஒத்திவைத்து உதவுவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி இலங்கைக்குத் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிதாக உதவும்.
சீனா
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சீனாவிடம் உதவி கோரிய நிலையில் பல வாரத்திற்குப் பின்பு தற்போது பதில் அளித்துள்ளது.
இலங்கை சீனாவிடம் வாங்கிய பெரிய கடன்கள் மற்றும் முதலீடுகள் கடன் தான் பொருளாதாரச் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சீன முதலீட்டுக்கு போதுமான லாபம் கிடைக்காத காரணத்தால் உதவி செய்ய மறுத்து வந்த நிலையில், தற்போது அவசரக்கால அடிப்படையில் மனிதாபிமான உதவி வழங்குவதாகக் கூறியதுள்ளது. மேலும் இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைக்குச் சீனா எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியம்
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என் அறிவித்த நிலையில் இலங்கை தற்போது IMF அமைப்பிடம் கடன் உதவிகளைப் பெறப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வருவதற்குச் சுமார் ஆறு மாதங்கள் ஆகும், மேலும் அந்த உதவிகளும் தவணையாகவே வரும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள்
இந்த இடைப்பட்ட காலத்தில், எங்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் நிதியைக் பிற நாடுகளிடம் இருந்து கடனாகப் பெற்று வரும் முயற்சியில் உள்ளம் எனவும் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications