சென்னை: இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. புதிய சிஇஓ-வாக பதவியேற்றியுள்ள ஸ்ரீனிவாஸ் பல்லியா தலைமையில் வெளியிடும் முதல் காலாண்டு முடிவு என்பதால் இது கொஞ்சம் ஸ்பெஷல். ஸ்ரீனிவாஸ் பல்லியா பதவிக்கு வந்த நாளில் இருந்து உயர்மட்ட நிர்வாகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, இதன் மூலம் விப்ரோ வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு வேகமாகத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,003 கோடி என இக்காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.2,870 கோடியுடன் ஒப்பிடும்போது 4.6% அதிகமாகும்.

ஆனால், வருவாயில் சரிவு காணப்படுவது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.22,831 கோடியாக இருந்த வருவாய், இந்த காலாண்டில் ரூ.21,964 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் விப்ரோ வருவாயில் 4% சரிவைப் பதிவு செய்துள்ளது. விப்ரோ காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஜூன் காலாண்டில் வரிக்கு பிந்தைய நிறுவனத்தின் லாபம் (PAT) சந்தை மதிப்பீடுகளான ரூ.2,993 கோடியை விட அதிகமாக இருந்தாலும், வருவாய் எதிர்பார்க்கப்பட்ட ரூ.22,258 கோடியை விடக் குறைவாக உள்ளதே இந்த கலவையான விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் அடுத்த காலாண்டு அதாவது செப்டம்பர் 30 உடன் முடிவடையும் காலாண்டிற்கான வழிகாட்டுதலை விப்ரோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின் படி விப்ரோ நிறுவனத்தின் சேவைப் பிரிவின் வருவாய் 2,600 மில்லியன் டாலர் முதல் 2,652 மில்லியன் டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நிலையான நாணய மதிப்பில் இது -1.0% முதல் +1.0% வரையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது.
விப்ரோ நிறுவனம் ஜூன் காலாண்டில் மொத்தமாக 3,284 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உள்ளன. இதில் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு 1,154 மில்லியன் டாலராகும். கடந்த காலாண்டை விட 3.1% மற்றும் கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டைக் காட்டிலும் 3.6% குறைவான ஆர்டர்களை பெற்றுள்ளது விப்ரோ.
இறுதியாக விப்ரோ நிறுவனத்தின் இந்த காலாண்டு முடிவுகள் லாபம் சிறிது உயர்ந்திருந்தாலும், வருவாய் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. எதிர்கால வழிகாட்டுதல்களும் வருவாயில் கட்டாயம் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதற்கான சிக்னல் இல்லை. இதனால் ஸ்ரீனிவாஸ் பல்லியா நிர்வாகத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஐரோப்பாவில் ஏற்கனவே வட்டி விகிதத்தை குறைத்திருக்கும் வேளையில் அமெரிக்க மத்திய வங்கியும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2024 இறுதி வரையில் 2 முறை வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விப்ரோ-வுக்கு புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதேவேளையில் போட்டியும் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications