சொந்த நிலம் வாங்க வேண்டும் என்பது சாமானியர்களின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒவ்வொருவரும் தங்களுடைய நிதிநலனை ஆராய்வது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
துபாயில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும், இந்தியாவில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும் ஒப்பிட்டு பேசிய அக்ஷத், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களுக்கு முக்கிய செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதாவது ஒருவரின் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக வீட்டு கடன் ஈஎம்ஐ இருந்தால், அது அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அக்ஷத் ஸ்ரீவஸ்தவா தன்னுடைய X பதிவில், "அடிக்கடி நான் துபாயில் இந்திய தம்பதிகளை சந்தித்து வருகிறேன். அங்கு அவர்கள் இரண்டு முதல் மூன்று சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். அவற்றை வாடகைக்கு விட்டு தங்கள் ஓய்வு கால நிதியாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதுபோன்ற சொத்துக்களில் முதலீடு செய்யும் பணக்காரர்களை நான் குறிப்பிடவில்லை. சாதாரணமாக கடினமாக உழைத்து பணம் சேமித்து 10 முதல் 15 வருடங்கள் கழித்து செல்வம் சேர்த்து சொத்துக்களில் முதலீடு செய்யும் தம்பதிகளை தான் குறிப்பிட்டுள்ளேன்.
இப்படி உழைத்து எப்படி சொத்தில் முதலீடு செய்கிறார்கள் என்பதற்கான கணக்கையும் ஸ்ரீவஸ்தவா பகிர்ந்திருந்தார். துபாயில் வசிக்கும் தம்பதியினர் 5% வட்டிக்கு கடன் வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து, தங்கள் சொத்துக்களை 6 முதல் 7 சதவீத வருமானத்தில் வாடகைக்கு விடுகின்றனர். இதனால் அவர்கள் ஈஎம்ஐ சுமையால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை.
இதற்கு நேர்மாறாக இந்தியாவில் உள்ள இந்திய தம்பதிகளின் நிலையையும் ஸ்ரீவஸ்தவா சுட்டிக் காட்டியிருந்தார். இந்தியாவில் உள்ள தம்பதிகளின் கதை இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கும். முதலில் அவர்கள் ஒரே ஒரு சொத்தை வாங்குகின்றனர். 10 சதவீத வட்டியில், அந்த சொத்தில் முதலீடு செய்ய கடன் பெறுகின்றனர். ஆனால் மூன்று சதவீத வருமானம் தான் பெறுகின்றனர். ஒருவரின் வருமானம் தொடர்ந்து இதனால் இஎம்ஐ-க்கு தான் செல்கிறது.
துபாய் ரியல் எஸ்டேட் சந்தை சிறந்தது என்றோ அல்லது இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை சிறந்தது என்றோ நான் கூறவில்லை. இந்த இரண்டு பகுதிகளிலும் சொத்து வாங்குவதால் ஏற்படும் சுமை என்ன? சுதந்திரம் என்ன? என்பதை தான் சொல்ல விரும்புகிறேன்.
இதிலிருந்து நான் கூற வருவது என்னவென்றால், இந்தியாவில் வீடு வாங்குபவர்கள் ஒரு எளிய விஷயத்தைப் பின்பற்றலாம். வீட்டின் ஈஎம்ஐ தொகை உங்கள் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஒருவேளை இருந்தால் இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்று விளக்கியிருந்தார். அதோடு இந்திய ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications