இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மும்பையில் சுமார் 60 அப்பார்ட்மென்ட்களை வாங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்தில் பணியாற்ற ஆர்கிடெக்ட்-களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மூத்த அதிகாரிகளை தங்க வைக்கவும், முக்கிய அதிகாரிகளின் வருகையின் போது பயன்படுத்தவும் இந்த 60 அப்பார்ட்மென்ட்களை வாங்க உள்ளது. இந்த 60 அப்பார்ட்மென்ட்களை வாங்கும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது எஸ்பிஐ.

இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் அளிக்கும் ஆர்கிடெக்ட்-களை ஆய்வு செய்து தேர்வு செய்யப்படுபவர், 60 அப்பார்ட்மென்ட்களை தேடி வாங்கி கொடுப்பது மட்டும் அல்லாமல் இத்திட்டங்களின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து நிர்வாகத்திடம் ஓப்படைக்கும் பொறுப்பும் உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த 60 அப்பாரட்மென்ட்களை ஒரே இடத்தில் அல்லது ஒரே வளாகத்தில் தேடி வருகிறது, இதன் மூலம் இந்த அப்பார்ட்மென்ட் ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் வளாகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த முக்கியமான பணியில் ஈடுபடும் ஆர்கிடெக்ட்-களுக்கு என்ன லாபம்.
எஸ்பிஐ தேர்வு செய்யும் இந்த ஆர்கிடெக்ட்-களுக்கு மொத்த திட்டத்தின் 0.5 சதவீதம் தொகை கமிஷனாக அளிக்கப்படும். இந்த தொகை 500 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த 60 அப்பார்ட்மென்ட்களை பரேல், லோவரே பரேல், வார்லி மற்றும் மகாலட்சுமி பகுதியில் தேடி வருகிறது.
இந்த திட்டம் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சொந்தமாக வைத்திருக்கும் அப்பார்ட்மென்ட் எண்ணிக்கை 500 ஆக உயர உள்ளது. இதில் 1BHK, 2BHK, 3BHK வீடுகளும் அடங்கும். இந்த 500 அப்பார்ட்மென்ட்-களும் மும்பையில் இருப்பது மிகவும் முக்கியமான விஷயம்.
பொதுவாக தனியார் வங்கிக்கும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசத்தை ஈடு செய்ய முக்கிய நகரங்களில் முக்கிய பகுதிகளில் தங்குவதற்காக வீடுகளை இலவசமாக அளிக்கிறது. இதன் மூலம் பெரும் தொகையை எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சேமிக்க முடியும்.
இதேபோல் எஸ்பிஐ மூத்த அதிகாரிகளுக்கு பயன்படுத்த சொந்தமாக கார்களும் அளிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் பெரிய செலவே தங்கம் வீடுக்கான வாடகையும், போக்குவரத்தும் தான், இதை நிர்வாகமே ஈடுசெய்யும் காரணத்தால் சம்பளம் குறைவாகவே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications