நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் முதல் தேதி, அதாவது பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் காரணமாக பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். 2024-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 112-வது பிரிவின்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி முடிவடையும் நிதியாண்டு தொடங்கும் முன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை அறிவிப்பது கட்டாயமாகும்.

இருப்பினும், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக, பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் பொதுவாக வெற்றி பெறும் கட்சியால் அறிவிக்கப்படும். சமூக நீதி, சமத்துவம் மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் இந்தியாவில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுகளை திட்டமிடும் ஒரு அறிக்கை. இதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை சீராக வழிநடத்த அரசு திட்டமிட்டு செயல்பட முடியும்.
மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவம் என்று பார்த்தால் வேலையில்லா திண்டாட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது, வறுமையை சமாளிப்பது, வருமான வேறுபாடுகளை குறைப்பது, போன்றவை இதில் அடங்கும். பணக்காரர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை குடிமக்களுக்கு வரி விதிமுறைகளில் மாற்றங்களும் செய்யப்படலாம்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும். டெய்லிஹன்ட் (Dailyhunt) ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு பட்ஜெட் நேரலை மற்றும் அதன் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்தது. இந்த வருடமும் கூடுதல் அம்சங்கள் உடன் மேம்பட்ட வகையில் மக்களுக்கு அளிக்க முயற்சித்து உள்ளது. எனவே கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் உங்கள் ஆதரவை தாருங்கள்!
பட்ஜெட் 2024 குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications