மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கு உடல்நல பாதிப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கும்பமேளாவில் கலந்துகொண்டு சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

மகா கும்பமேளா நிகழ்வை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருந்து பலரும் இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரென் பாவெல் ஜாப்ஸ் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

 மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கு உடல்நல பாதிப்பு..!

இதற்காக அவர் சில தினங்களுக்கு முன்பு இந்தியா வருகை தந்தார். 61 வயதாகி இருக்கும் அவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஸ்வர சுவாமி கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் முகாமில் 17 நாட்கள் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடுவார் என்றும் கல்பவாசம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதல் நாளில் பாவெல் ஜாப்ஸ் திட்டமிட்டப்படி புனித சடங்குகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இரண்டாம் நாளில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் கங்கை நதியில் புனித நீராடும் சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுவாமி கைலாசானந்த கிரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ,பாவெல் ஜாப்ஸ் சங்கமத்தில் புனித நீராடும் சடங்கில் பங்கேற்பார் என்றும் இதனைத் தொடர்ந்து முகாமில் சென்று அவர் ஓய்வு எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு சில அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு பாவெல் ஜாப்ஸ் இவ்வளவு கூட்டம் நிறைந்த பகுதியில் இருந்தது கிடையாது எனக் கூறியுள்ளார்.

பாவெல் ஜாப்ஸ் மிகவும் எளிமையானவராக இருக்கிறார் , பூஜை நேரத்தில் எங்களுடன் தங்கி இருப்பார் என அவர் கூறியுள்ளார். முன்னதாக மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பாவெல் ஜாப்ஸ் திங்களன்று பிரயாக்ராஜ் வருகை தந்தார். அங்கே அவருக்கு சுவாமி கைலாசானந்த கிரி "கமலா" என பெயர் சூட்டினார்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா நிகழ்வு நடப்பாண்டு கூடுதல் சிறப்பு கொண்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இது ஆன்மாவை தூய்மைப்படுத்துவதாக நம்பிக்கை இருக்கிறது. 45 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+