மும்பை பங்கு சந்தை விடுமுறை காலண்டரின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியான வியாழன் அன்று வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஈக்விட்டி, டெரிவேட்டிவ் மற்றும் SLB செக்மென்ட் உட்பட அனைத்து பிரிவுகளும் நாளை மூடப்படும். இதற்கிடையில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையும் (MCX) காலை மற்றும் மாலை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், சுதந்திர தினம் தவிர, செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று வரும் இத்-இ-மிலாத், அக்டோபர் 2-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி ஜெயந்தி, நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளி, நவம்பர் 15-ஆம் தேதி வரும் குருநானக் ஜெயந்தி, மற்றும் டிசம்பர் 25-ஆம் தேதி அன்று வரும் கிறிஸ்துமஸ் ஆகியவற்றிற்கும் சந்தைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதற்கான தனி அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படும்.

புதன்கிழமை வர்த்தக முடிவில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறிய அளவில் உயர்ந்து காணப்பட்டன. இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 149.85 புள்ளிகள் உயர்ந்து 79,105.88 புள்ளிகளை தொட்டு உள்ளது, நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் உயர்ந்து 24,143.75 புள்ளிகளை தொட்டு உள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி பொருட்களின் விலை குறியீடு குறைந்து வருவதாக நேற்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் நேற்றில் உயர்வில் முடிந்த காரணத்தால், இன்று ஆசிய பங்குச்சந்தைகளும் சிறிய அளவிலான உயர்வுடன் காணப்பட்டது. தற்போதைய கணிப்புகளின் செப்டம்பர் மாதம் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைகக்கும் இது அமெரிக்க சந்தை உட்பட சர்வதேச சந்தைக்கும் சாதகமாக இருக்கும் , இதுவே செப்டம்பர் மாதமும் வட்டி விகிதத்தை குறைக்காவிடில் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications