மும்பை பங்கு சந்தை விடுமுறை காலண்டரின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியான வியாழன் அன்று வர்த்தகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக, ஈக்விட்டி, டெரிவேட்டிவ் மற்றும் SLB செக்மென்ட் உட்பட அனைத்து பிரிவுகளும் நாளை மூடப்படும். இதற்கிடையில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையும் (MCX) காலை மற்றும் மாலை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், சுதந்திர தினம் தவிர, செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று வரும் இத்-இ-மிலாத், அக்டோபர் 2-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி ஜெயந்தி, நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளி, நவம்பர் 15-ஆம் தேதி வரும் குருநானக் ஜெயந்தி, மற்றும் டிசம்பர் 25-ஆம் தேதி அன்று வரும் கிறிஸ்துமஸ் ஆகியவற்றிற்கும் சந்தைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதற்கான தனி அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படும்.

புதன்கிழமை வர்த்தக முடிவில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறிய அளவில் உயர்ந்து காணப்பட்டன. இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 149.85 புள்ளிகள் உயர்ந்து 79,105.88 புள்ளிகளை தொட்டு உள்ளது, நிஃப்டி குறியீடு 4.75 புள்ளிகள் உயர்ந்து 24,143.75 புள்ளிகளை தொட்டு உள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி பொருட்களின் விலை குறியீடு குறைந்து வருவதாக நேற்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், அமெரிக்க பங்குச் சந்தை குறியீடுகள் நேற்றில் உயர்வில் முடிந்த காரணத்தால், இன்று ஆசிய பங்குச்சந்தைகளும் சிறிய அளவிலான உயர்வுடன் காணப்பட்டது. தற்போதைய கணிப்புகளின் செப்டம்பர் மாதம் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைகக்கும் இது அமெரிக்க சந்தை உட்பட சர்வதேச சந்தைக்கும் சாதகமாக இருக்கும் , இதுவே செப்டம்பர் மாதமும் வட்டி விகிதத்தை குறைக்காவிடில் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications