வெளிநாடு செல்லும் பலரும் தங்களது ஊர் போல இங்கு உணவு கிடைக்கவில்லையே என ஏங்கிப்போவார்கள். அதிலும் சைவ உணவு உண்பவர்கள் என்றால் மேற்கத்திய நாடுகளில் பெரும் உணவு போராட்டத்தையே எதிர்கொள்வார்கள்.
அப்படி அமெரிக்கா சென்று அங்கு தனது ஊர் உணவுக்காக ஏங்கி, அதையே ஒரு தொழிலாகச் செய்து இன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக 50 மளிகைக் கடைகளை கொண்ட சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்கள் இந்த பட்டேல் சகோதரர்கள்.
யார் இந்த பட்டேல் பிரதர்ஸ்? அமெரிக்காவில் எப்படி வர்த்தக சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார்கள் என இங்கு தொடர்ந்து பார்க்கலாம்.
அமெரிக்கப் பயணம்
குஜராத்தில் 1969-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு எம்பிஏ படிக்க செல்கிறார் மஃபத் பட்டேல். அங்கு சென்ற அவருக்கு இந்திய உணவு கிடைக்காமல் அதன் ஏக்கத்தில் தவிக்கிறார். அப்போது 1971-ம் ஆண்டு நாம் ஏன் இந்தியர்களுக்கான ஒரு மளிகை கடையைத் திறக்கக் கூடாது என முடிவு செய்கிறார்.
ஆரம்பம்
அதற்காகத் தனது தம்பி துளசி பட்டேலை அமெரிக்கா அழைத்துச் சென்று சிறிய அளவில் மசாலா பொருட்களை விற்க தொடங்குகிறார். பின்னர் 1974-ம் ஆண்டு அது ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டாக உருவாகிறது. இந்தியாவில் அமெரிக்கா செல்லும் பலருக்கான தாய் வீடு போல இவரது வீடும் கடையும் மாறுகிறது.
ஸ்வாட்
நாம் இங்கு அமெரிக்கக் குளிர்பானங்கள், சாக்லேட், சிப்ஸ் என இங்கு சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் பட்டேல் சகோதரர்கள், அம்ரிக்காஇல் இந்திய நொறுக்குத் தீனிகளை, சமோசா, முறுக்கு, கச்சோரி போன்றவற்றை பேக் செய்து ஸ்வாட் என்ற பிராண்ட் ப்யரில் 1991-ம் ஆண்டு விற்க தொடங்குகிறார்கள்.
ராஜா புட்ஸ்
அது நல்ல பயன் வழங்க ராஜா ஃபுட்ஸ் என்ற பெயரில் பாலக் பன்னீர் மசாலா, சிக்கன் டிக்கா மசாலா, சன்னா மசாலா போன்ற பொருட்களை பேக் செய்து விற்க ஆரம்பிக்கிறார்கள். அமெரிக்க சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த பிராண்டு பிரபலமாகி அமெரிக்க சென்ற இந்தியர்களின் தாய் வீடாக இவர்களது கடைகள் இப்போது உள்ளன.
மதிப்பு
இப்போது பட்டேல் பிரதர்ஸ் மதிப்பு 140 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மளிகை, உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் விமான சுற்றுலா, துணிக்கடை, கைவினைப் பொருட்கள், ஓட்டல் என பல்வேறு வணிகங்களைச் செய்து வருகிறார்கள்.
கிளைகள்
பட்டேல் பிரதர்ஸ் இப்போது அமெரிக்கா முழுவதும் 50 இடங்களில் பிராஞ்சிஸ் முறையில் தங்களை கிளையை நடத்தி வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டவரையும் கவரும் நோக்கில் இவர்களது வணிகம் இன்று அமெரிக்காவில் தவிர்க முடியாத சாராஜ்யமாக உருவாகியுள்ளது.
இந்தியாவில் பட்டேல் பிரதர்ஸ்
குஜராத் பூகம்பத்திற்குப் பிறகு, படேல் சகோதரர்கள் அகமதாபாத்தில் சாம்வேதனா நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இதன் மூலம் குட்ச் நகரில் 160 வீடுகள், ஒரு பள்ளி, ஒரு மருத்துவ மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. (இந்தக் குடியிருப்பு சிகாகோ டவுன்ஷிப் என்று அழைக்கப்படுகிறது) மேலும் இந்த நிறுவனமானது அகமதாபாத்தின் எல்ஜி மருத்துவமனையில் முதல் தீக்காயக் கவனிப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளது மற்றும் காந்திநகரில் உள்ள காதி சர்வ் வித்தியாலயாவிற்கு சுமார் ரூபாய் 2 கோடிகளை நன்கொடையாக அளித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications