இந்திய ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலும் நாம் பார்ப்பது தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் தான். இப்படியிருக்கையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டுகளை நீங்கள் பார்த்து உள்ளீர்களா அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் கொண்ட ரூபாய் நோட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா..?
உண்மையில் அப்படியொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிரிட்டிஷ் படைக்கு எதிராக இந்திய போராட வேண்டும் என்பதற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் 1942ல் உருவாக்கப்பட்டது. போருக்கு தேவையான ஆயுதங்கள், படைகளுக்குத் தேவையானவற்றை ஏற்பாடுகள் செய்ய அதிகளவிலான நிதி தேவைப்பட்டது.
ஆசாத் ஹிந்த் வங்கி
அப்போது தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் உதவியுடன் அன்றைய பர்மா-வின் ரங்கூன் பகுதியில் 1944ஆம் ஆண்டு ஆசாத் ஹிந்த் வங்கியை உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலை விரும்பும் மக்கள் இந்த வங்கி வாயிலாக அதிகளவிலான நிதியுதவியைச் செய்தனர்.
ஆசாத் ஹிந்த் வங்கி ரூபாய் நோட்டு
ஆசாத் ஹிந்த் வங்கி உருவாக்குவதற்கு முன்பு மக்கள் கொடுக்கும் நிதியில் தான் மொத்த போராட்டமும் நடைபெற்றது. ஆனால் ஆசாத் ஹிந்த் வங்கி துவங்கப்பட்ட பின்பு வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு பயன்பாட்டு வழங்கத் துவங்கியது. இந்த ரூபாய் நோட்டில் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகைப்படம் இருந்தது.
ஜப்பான்
ஆசாத் ஹிந்த் வங்கி பர்மா-வின் ரங்கூன் பகுதியில் மட்டும் அல்லாமல் ஜப்பான் நாடு முழுவதும் வங்கி கிளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வங்கியில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் இந்தியா முழுவதும் குறிப்பிட்ட காலம் வரையில் புழக்கத்தில் இருந்தது.
இணையத்தில் வரைல்
இப்படிப் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. 1980ல் மாநில அரசு வேளையில் இருந்து ஓய்வு பெற்ற ராம் கிஷோர் துபே-வின் தாத்தாவின் ராமாயணம் புத்தகத்தில் புரட்டிய போது ஆசாத் ஹிந்த் வங்கி வெளியிட்ட 1,00,000 ரூபாய் மதிப்புடைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முகம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு 2010ல் கிடைத்ததுள்ளது. ஆனால் தற்போது இந்த ரூபாய் நோட்டு புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது. புகைப்படம்:திஹிந்து
இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ்
இந்த ரூபாய் நோட்டுச் சுதந்திரத்திற்கு முன்பு வெளியிட்டு இருந்தாலும், இந்த ரூபாய் நோட்டில் சுதந்திர இந்தியா "swatantra bharat" என்ற வாசகமும், ஜெய்ஹிந்து என்ற வாசகமும் உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த ரூபாய் நோட்டில் இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவை இணைந்த பாரதத்தின் வரைபடமும் உள்ளது. புகைப்படம்:விக்கி
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications