பெங்களூர்: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், சமூக சேவகருமான திருமதி சுதா மூர்த்தி ராஜ்யசபா உறுப்பினராகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வெள்ளிக்கிழமை திருமதி சுதா மூர்த்தி அவர்கள் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் திருமதி சுதா மூர்த்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, "இந்திய குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தி அவர்களை ராஜ்யசபாவுக்கு பரிந்துரை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமூக சேவை, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மிகவும் பிரமிக்க வைக்கிறது மற்றும் ஈர்க்கிறது. ராஜ்யசபையில் அவரது இருப்பு நம் நாட்டின் 'நாரி சக்தி'க்கு ஒரு வலுவான சான்று, நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் பலம் மற்றும் திறனை இதை எடுத்துக்காட்டுகிறது. அவர் சிறப்பான நாடாளுமன்ற பதவிக்காலத்தைப் பெற வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது, அதைப் பார்வையிட அரசு தரப்பில் இருந்து அவர் அழைக்கப்பட்டார். அப்போது வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசும்போது, சுதா மூர்த்தி அவர்கள் புதிய கட்டிடம் குறித்த தனது வியப்பு பகிர்ந்துக்கொண்டார்.
இப்போது ஒரு செய்தியாளர் "நீங்கள அதிகாரப்பூர்வ பதவியுடன் உள்ளே செல்ல விரும்புகிறீர்களா?" என்று கேள்வி கேட்டதற்கு, 73 வயதான சுதா மூர்த்தி கைகளை கூப்பி தலையை வேண்டாம் என அசைத்து, "நான் என்னுடைய இடத்தில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.
ஆனால் இப்போது சுதா மூர்த்தி உண்மையிலேயே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி செய்த சமுக சேவையை பாராட்டும் விதிமாக பத்ம பூஷன் விருது 2023ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செய்தியாளர் கேள்வி பதில் சம்பவம் நடந்தது.
இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் சமூக சேவகருமான திருமதி சுதா மூர்த்தி, வெள்ளிக்கிழமை அன்று ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து, இது தனக்கு கிடைத்த "பெண்களுக்கான பெரிய விருது" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவரது நியமனத்தைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
CNN News18 உடனான உரையாடலில், "நான் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் எனக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் உணர்கிறேன். என்னுடைய பணியை பிரதமர் மோடி பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளுக்காகப் பணிபுரிவதற்குப் பெரிய தளம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு அரசியல்வாதி என்று கருத முடியாது. நான் நியமனம் செய்யப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர். என் மருமகனின் நாட்டுக்கான அரசியல் வேறு, என்னுடைய பணி வேறு..." என்று
"இது எனக்கு பெண்கள் தினத்திற்கான பெரிய விருது. நாட்டுக்காக பணியாற்றுவதற்கான புதிய பொறுப்பு" என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications