வாடகை வீட்டில் வசிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர்.. யாரும்மா நீ..?!

பெங்களூரு: பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழில் முனைவோர் தான் சுகாசினி சம்பத். அண்மையில் இவர் 1% கிளப் ஷோ என்ற பாட்காஸ்டில் பங்கேற்று பேசினார். நிதி ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கும் சுகாசினி சம்பத் இன்னமும் தான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த பாட்கேஸ்டில் அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சுகாசினி சம்பத் யோகா பார் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம் அவருடைய சகோதரி அணிந்தாவுடன் 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பல்வேறு சத்து நிறைந்த சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனம் இது. இந்த நிறுவனம் ஐடிசி நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.

வாடகை வீட்டில் வசிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர்.. யாரும்மா நீ..?!

இந்த நிறுவனத்தில் சுமார் 39 சதவீத பங்குகள் கடந்த ஆண்டு ஐடிசி நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐடிசி நிறுவனம் யோகா பார் நிறுவனத்தின் மொத்த உரிமத்தையும் பெற்றுக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 500 கோடி ஆகும். நிறுவன விற்பனை மூலம் இவ்வளவு பெரிய லாபத்தை பெற்று இருந்தும் இவர் இன்னமும் தொடர்ந்து வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

அவர் பெங்களூருவில் வாடகை குடியிருப்பில் இருப்பது பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாட்காஸ்ட் தொகுப்பாளர் அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடே செய்யவில்லையா என கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்கு சொந்தமாக 2 குடியிருப்புகள் இருந்தாலும் அவர் இன்னும் வாடகை வீட்டில் தான் வசிப்பதாக கூறுகிறார். அதன் மூலம் வரிச்சலுகைகள் கிடைக்கும், எனவே தான் அதை சொந்தமாக வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய சொத்து மதிப்பு இருந்தும் அவர் ஏன் வாடகை வீட்டிலேயே வசிக்கிறார் என்பது குறித்து பலரும் தங்களது கேள்விகளை முன் வைத்துள்ளனர். நீங்கள் இவ்வளவு பணம் வைத்திருந்தும் அதனை உங்களுக்காக செலவு செய்யாவிட்டால் அந்த பணத்தை சம்பாதிப்பதில் என்ன பலன் இருக்கிறது என ஒரு பயனாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் மட்டுமல்ல இந்தியாவை சேர்ந்த பல்வேறு பெரும் பணக்கார தொழிலதிபர்களும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்கள். ஸெரோதா நிறுவனத்தின் தலைவரும் மிகப்பெரிய பணக்காரனுமான நிகில் காமத் இன்னுமும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். அதேபோல பாம்பே சேவிங் நிறுவனத்தின் தலைவர் சாந்தனு தேஷ்பாண்டே கூட வாடகை வீட்டில் வசிப்பதாகவே கூறி இருக்கிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+