2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தி அறிவித்ததுள்ளது.
ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2024 வரையிலான காலகட்டத்தில், குறிப்பிட்ட சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதாக டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சுகன்யா சம்ரிதி கணக்கிற்கான வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும், தபால் நிலையத்தில் அளிக்கப்படும் 3 வருட வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து திட்டத்திலும் பழைய வட்டி விகிதம் தொடரும்.
இந்தியாவில் இருக்கும் அனைத்து தபால் நிலையத்தில் அளிக்கப்படும் முக்கிய நிதி சேவைகள் தான் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போது 3 வருட கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு ஆகியவற்றின் வட்டி மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் மாற்றப்பட்டு உள்ள வட்டி விகிதம் மார்ச் 31, 2024 வரை மட்டுமே.
சேமிப்பு கணக்கு - 4 வட்டி விகிதம்
1 வருட கால வைப்பு நிதி - 6.9 வட்டி விகிதம்
2 வருட கால வைப்பு நிதி - 7 வட்டி விகிதம்
3 வருட கால வைப்பு நிதி - 7.1 வட்டி விகிதம்
5 வருட கால வைப்பு நிதி - 7.5 வட்டி விகிதம்
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி - 6.7 வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 8.2 வட்டி விகிதம்
மாதாந்திர வருமான கணக்குத் திட்டம் - 7.4 வட்டி விகிதம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் - 7.7 வட்டி விகிதம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 7.1 வட்டி விகிதம்
கிசான் விகாஸ் பத்திரா - 7.5 வட்டி விகிதம்
சுகன்யா சம்ரிதி கணக்கு - 8.2 வட்டி விகிதம்
இதில் சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் பெரும்பாலான மக்கள் 0.2 சதவீத வட்டி உயர்வின் மூலம் பலன் அடைவார்கள். தபால் நிலைய 3 வருட கால வைப்பு நிதி திட்டத்திற்கு வெறும் 0.1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரும் வேளையில் மத்திய அரசு முக்கிய சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டு உள்ளது.
டிசம்பர் 27, 2023 நிலவரப்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஸ்பிஐயின் வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி விகிதம் 3.5 சதவீதம் முதல் 7 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் அதிகமாக வட்டி வருமான அளிக்கப்படுகிறது. இதாவது இதே காலகட்டத்திற்கு மூத்த குடிமக்கள் 4 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையிலான வட்டி வருமானத்தைப் பெறுவார்கள்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications