பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் நினைவுக்கு முதலில் வருவது "சுகன்யா சம்ரித்தி யோஜனா" திட்டம் தான். போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டாலும்.. பெண் குழந்தைகளுக்கு என்று வரும்போது பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் கணக்கு திறப்பதில் உள்ள முரண்பாடுகளை சரி செய்வதற்காக கொண்டு வரப்படவுள்ளன.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நடைமுறைகளில் முக்கியமான ஒன்று தாத்தா பாட்டிகளால் திறக்கப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளுக்குப் பொருந்தும். இந்த புதிய விதிகளின்படி சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் மட்டுமே SSY கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க முடியும். தாத்தா பாட்டிகளின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு திறக்கப்பட்டிருந்தால் இந்த புதிய விதிகளுக்கு இணங்க வேண்டும்.

முன்பெல்லாம் தாத்தா பாட்டி தங்கள் பேத்திகளுக்கு SSY கணக்குகளைத் திறப்பது வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்போது சட்டபூர்வ பாதுகாவலர் மற்றும் பெற்றோர் மட்டுமே இந்த கணக்குகளைத் திறந்து நிர்வகிக்க வேண்டும் என்று இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
தாத்தா பாட்டியின் கீழ் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரித்தி கணக்குகளை திறந்திருந்தால் அவர்கள் புதிய விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது? என்பதைப் பார்ப்போம். முதலில் SSY கணக்குகளைச் சட்டபூர்வ பாதுகாவலர் பெயரில் மாற்ற வேண்டும். இந்த ட்ரான்ஸ்ஃபர் ப்ராசஸை தொடங்குவதற்கு முன்பு ஒருவர் பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
SSY கணக்கு பாஸ் புக்: இதில் SSY கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும்.
பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்: இதில் குழந்தைக்கான வயது பற்றிய விவரங்கள் இருக்கும்.
பெண் குழந்தையுடனான உறவின் சான்று: அதாவது கணக்கு மாற்றப்படும் நபருடன் குழந்தைக்கு என்ன உறவு என்பதை எடுத்துக்காட்டும் ஆவணங்கள்.
புதிய பாதுகாவலரின் அடையாளச் சான்று: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆவணங்கள் தேவைப்படலாம். இதற்கு அரசாங்க ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.
பல கணக்குகளை மூடுதல்: இந்தப் புதிய நடைமுறையின் மூலம் கூடுதலாக 2, 3 SSY கணக்குகளைத் திறப்பவர்களை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதாவது ஒரு பெண் குழந்தைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கணக்கு தொடங்கப்பட்டிருந்தால் கூடுதல் கணக்குகள் உடனடியாக மூடப்படும். அசல் தொகை எந்தவித வட்டியும் இன்றி திருப்பி செலுத்தப்படும். SSY வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications