சென்னை: சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்பது வரி இல்லாத மற்றும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ப்ரத்யேக சேமிப்புத் திட்டமாகும். 10 வயதுடைய அல்லது அதற்கு குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம். குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இது ஒரு தொடர் வாய்ப்பு நிதி ஆகும். கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு பெண் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் போது இந்த திட்டம் முதிர்ச்சியடையும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மாறுபடுகிறது. இதுபோன்ற சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் புதிதாக தீர்மானிக்கிறது.
எனவே இத்திட்டத்தின் வட்டி விகிதம் முழு முதலீட்டு காலத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்காது. மாறாக, ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு அறிவிக்கும் விகிதத்தைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். சான்றாக, Q 1 காலாண்டில் அரசாங்கம் வட்டி விகிதத்தை அதிகரித்தால், உங்கள் முதலீட்டு தொகை அந்தக் காலாண்டில், அதிக வட்டி விகிதத்தைப் பெறும். மாறாக, அரசாங்கம் ஒரு காலாண்டிற்கு வட்டி விகிதத்தை குறைத்தால், உங்கள் முதலீடு குறிப்பிட்ட அந்த காலாண்டில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறும்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான Q 1 காலாண்டில் 8.2% வட்டி விகிதத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது முழு முதலீட்டு காலத்திற்கும் நிலையானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. இந்த Q 1 காலாத்திற்கான வட்டி விகிதம் தான் 8.2 சதவீதம். இது அடுத்த Q 2 காலாண்டில் மாறுபடலாம்.
மேலும் இத்திட்டத்தைப் பயன்படுத்தி வட்டிக்கு வட்டி பெற முடியும். காலப்போக்கில் அதிக பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றங்களை செய்யும் வகையில், அரசாங்கம் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றுகிறது. இது தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என BankBazaar.com இன் சிஇஓ ஆதில் ஷெட்டி கூறினார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதியிலுள்ள தொகையை வைத்து அந்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்பட்டு ஆண்டு இறுதியில் வரவு வைக்கப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications