Sukesh Chandrasekar: 20000 கோடி வருமானம், ரூ.7640 கோடி வரி செலுத்த ரெடி! நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

டெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், அரசுக்கு தான் 7,640 கோடி ரூபாய் வரி செலுத்த தயாராக இருக்கிறேன் என கடிதம் எழுதியுள்ளார்.

தன்னுடைய வழக்கறிஞர் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய வருமான வரிச் சட்டத்தின் நடைமுறையின் கீழ் தான் 7,640 கோடி ரூபாய் வரி செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

20000 கோடி வருமானம், ரூ.7640 கோடி வரி செலுத்த ரெடி! நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

தன்னுடைய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

சுகேஷ் சந்திரசேகர் தனக்கு சொந்தமாக எல்.எஸ். ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை அமெரிக்காவிலும், ஸ்பீடு கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளிலும் செயல்படுத்தி வருகிறார். இந்த நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கேமிங் மற்றும் பெட்டிங் பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றன.

2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் இவருக்கு 2.70 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டி தந்துள்ளது எனக் கூறியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

அது தவிர அமெரிக்கா, ஸ்பெயின், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் தனக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறியிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் , இந்த நிறுவனங்கள் சட்டத்துக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன என தெரிவித்துள்ளார். தன் பெயரில் நிலுவையில் இருக்கும் வருமான வரி சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் தீர்க்க நான் விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இதற்காக 7640 கோடி ரூபாய் வரி செலுத்துவதற்கு தயாராக இருக்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

தான் ஒரு அரசு உயர் அதிகாரி என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்டோர் இடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் 50 கோடி வரை ஏமாற்ற முயற்சி செய்தது என பல்வேறு மோசடி வழக்குகள் சுகேஷ் சந்திரசேகர் மீது இருக்கின்றன.

இவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தன் மீதான வருமானவரித்துறை தொடர்பான வழக்குகளை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் இவர் காதல் உறவில் இருப்பதாக அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறையில் இருந்த படியே காதலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகளை வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+