இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமும், தென்னியாந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 13.86% அதிகரித்து ரூ.456.24 கோடியாக உள்ளது, இது முந்தைய நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டில் ரூ.400.71 கோடியாக இருந்தது குறிப்பிடித்தக்கது.

மேலும் செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் EBITDA அளவு 524.78 கோடி ரூபாயில் இருந்து ரூ.716.21 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் EBITDA அளவில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சுமார் 36.48% வளர்ச்சியடைந்தது.
உள்நாட்டு வர்த்தகத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் சப்ஸ்கிரிப்ஷன் வருவாய் 5.34% அதிகரித்து ரூ.418.23 கோடியாக உள்ளது. இதோடு அப்ரேட்டிங் ரெவென்யூ என அழைக்கப்படும் இயக்க வருவாய் 28% அதிகரித்து ரூ.1,017.98 கோடியாக உள்ளது.
இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 27.48% அதிகரித்து ரூ.1,125.08 கோடியாக உள்ளது. மேலும் இக்காலாண்டு முடிவில் முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தும் நோக்கில் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்குச் சுமார் 5 ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சன் டிவி நெட்வொர்க் ஆறு மொழிகளில் டிவி சேனல்களையும், சன் என்எக்ஸ்டி எனப்படும் OTT இயங்குதளத்தையும், இந்தியா முழுவதும் FM வானொலி நிலையங்களையும் கொண்டு மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்குகிறது.
இதைத் தாண்டி சன் டிவி நெட்வொர்க் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்க டுவென்டி 20 லீக்கில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் கொண்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க்-ன் நிறுவனர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகள் பட்டியலில் உள்ளனர்.
2012 ஆம் நிதியாண்டில் கலாநிதி மாறன் 57 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்ற நிலையில் காவேரி கலாநிதி-யும் 57 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றார். இதேபோல் 2021 ஆம் நிதியாண்டில் 87.50 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
1993ல் கலாநிதி மாறன் துவங்கிய சன் டிவி நெட்வொர்க் இன்று 33 டிவி சேனல்கள் உடன் தென்னிந்திய மீடியா உலகை அசத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் மாறன் குடும்பம் சுமார் 75 சதவீத பங்களை வைத்திருக்கும் வேளையில் நிறுவன முகலீட்டாளர்கள் 12 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications