இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி பல நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, ப்ராடெக்ட் டெக் முதல் மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு வரையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள இஸ்ரேலில் அலுவலகத்தை திறந்துள்ளது.
பல நிறுவனங்கள் கூட்டணி வாயிலாகவும், நிறுவனத்தை கைப்பற்றுவது வாயிலாகவும் வர்த்தகத்தையும், அலுவலகத்தையும் இஸ்ரேல் நாட்டில் பல MNC நிறுவனங்கள் விரிவாக்கம் செய்தது. இதில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவையும் அடங்கும்.

இந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி சனிக்கிழமை காலையில் துவங்திய ஹமாஸ் அமைப்பின் தாக்குத்தல் மூலம் இஸ்ரேல் பதில் தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் தற்போது பெரும் பொருளாதார பிரச்சனையாக மாறியுள்ளது.
பல அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில், இஸ்ரேல், பிரிட்டன் ஆகியவை இஸ்ரேல்-க்கு ஆதரவாக நிற்கிறது. இதனால் சர்வதேச முதலீட்டு சந்தையில் பதற்றமான நிலையை தொடர்ந்து நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் ஆக்கிரமித்த காசா ஸ்டிரிப் பகுதியை மொத்தமாக கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்குமான தாக்குதல் துவங்கிய நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் இதுக்குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இதன் படி கூகுள் நிர்வாகம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் கூகுள் ஊழியர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்யும் கூகுள் ஊழியர் என அனைவரையும் தொடர்பு கொண்டு பாதுக்காப்பாக இருப்பதை உறுதி செய்யுள்ளோம், மேலும் அவர்களுக்காக முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாக இந்த ஈமெயிலில் தெரிவித்தார் சுந்தர் பிச்சை.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்குமான பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்த சுந்தர் பிச்சை, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் நிர்வாகத்தின் முக்கிய பணி எனவும் தெரிவித்தார். கூகுள் இஸ்ரேல் நாட்டில் 2 அலுவலகத்தை Haifa, Tel Aviv பகுதியில் வைத்துள்ளது, இதில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications