சாமானிய மக்கள் மத்தியில் அதிகச் சம்பளம் வாங்குவோர் என் பிம்பம் எப்போதும் டெக் மற்றும் ஐடி ஊழியர்கள் மீது உள்ளது. ஆனால் கடந்த ஒருமாதமாக டெக் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிகமானோருக்குத் தெரியாது.
2022 ஆம் ஆண்டுப் பொருளாதார மந்த நிலை வரும் என முன்கூட்டியே கணித்து முதல் முதலாக இந்தக் காரணத்தைச் சொல்லி பணிநீக்கம் செய்தது எலான் மஸ்க் தான், எலான் மஸ்க் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனத்திலும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த நிலையில் அடுத்த சில நாட்களில் சக போட்டி நிறுவனங்கள் அவர்களைப் பணியில் சேர்த்துக்கொண்டது.
அப்போது எலான் மஸ்க் தேவையில்லாமல் பதற்றத்தை உருவாக்குகிறார் எனப் பேச்சு இருந்த நிலையில் அடுத்தச் சில நாட்களில் பேஸ்புக், அமேசான் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் வரலாறு காணாத அளவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
2023 பணிநீக்கம்
2023 ஆம் ஆண்டுத் துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது. 2022ல் மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
டாப் 4 டெக் சேவை நிறுவனங்கள்
உலகின் டாப் 4 டெக் சேவை நிறுவனங்களும் 10000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இதன் தலைவர்கள் சொல்லும் காரணமும்.. விளக்கமும் என்ன..? இதைக் கவனித்தால் ஒரு நிறுவனம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை டெக் ஊழியர்கள் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை பணிநீக்கம் குறித்துத் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தற்போது பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டத்திற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மோசமான பொருளாதார மாற்றத்தில் கூகுளின் 25 வருட வரலாற்றில் மாட்டிக்கொண்டு உள்ளது. கடந்த 2 வருடம் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்காமல் அதிகப்படியான ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்துள்ளதால், தற்போது பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.
இதேநேரத்தில் கூகுள் செலவுகளைக் குறைக்கும் விதமாக Pixelbook laptop மற்றும் கேம் ஸ்ட்ரீமிங் தளமாக Stadia ஆகிய இரு பிரிவையும் மூடியது.
அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிலையற்ற பொருளாதாரம் மற்றும் அளவுக்கு அதிகமாக ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் ஜனவரி 18 முதல் 18000 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்தப் பணிநீக்க அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி 5 ஆம் தேதி ஈமெயில் தெரிவித்தார் அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி . இதன் மூலம் இனி வரும் காலத்தில் பணத்தையும், நேரத்தையும் சரியான இடத்திலும், சரியான வகையில் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
அமேசான் தனது ரோபோட்டிக்ஸ் பிரிவை மொத்தமாக மூடுவதற்காகப் பணிகளில் தீவிரமாக உள்ளது. இதுக்குறித்து அமேசான் ஊழியர்கள் லின்கிடுஇன் தளத்தில் பதவிட்டு உள்ளார்.
மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெட்டா நிறுவனத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மிகவும் சோகத்துடன் கலந்து கொண்டு உள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளுக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் பேசிய அவர் கொரோனா காலத்தில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் வருவாய் அளவீடுகளை நம்பி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றிய அதீத நம்பிக்கையினாலும், தவறான கணிப்பினாலும் அதிகளவிலான ஊழியர்களைச் சேர்க்கப்பட்டது என்று கூறினார்.
இக்கூட்டத்தில் தான் மார்க் ஜூக்கர்பெர்க் முதல் முறையாக ஊழியர்களுக்கான எச்சரிக்கையைத் தாண்டி மாஸ் லேஃஆப் குறித்துப் பேசினார்.
செப்டம்பர் 30ஆம் தேதி தரவுகள் படி மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய தளத்தில் மொத்தமாகச் சுமார் 87000 ஊழியர்கள் உலகளவில் பணியாற்றி வந்தனர். இதில் 12 சதவீதம் வரையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 11000 ஊழியர்களை மெட்டா நிறுவன பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தப் பணிநீக்க அறிவிப்பு நவம்பர் மாதம் 2022ல் வெளியானது.
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா
கொரோனா காலத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் செலவு செய்யும் அளவு பெரிய அளவு அதிகரித்து, ஆனால் தற்போது இது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேவேளையில் உலகின் பல பகுதிகளில் ரெசிஷன உருவாகியிருக்கும் காரணத்தால் நம்முடைய சர்வதேச வர்த்தகத்தில் எச்சரிக்கும் அளவிற்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதேவேளையில் கம்பியூட்டிங் துறையில் அடுத்த அலை AI மூலம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிர்வாகம் தனது ஹார்டுவேர் போர்ட்போலியோவில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றத்தைச் செய்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் சில அலுவலகங்களின் குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் 10000 பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications