உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது வேலை செலவுகளை குறைக்கவும், லாபத்தை வானுயர உயர்த்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த கடுமையான போட்டி மற்றும் அசுர வேகமான வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வரும் கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, தற்போது AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம் (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் முயற்சியின் காரணமாக, கூகுளின் 'ஜெமினி' போன்ற AI தயாரிப்புகளில் முதலீடு செய்யப்பட்டதால், கடந்த 7 மாதங்களில் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பானது. இருப்பினும், இந்த வேகமான வளர்ச்சியானது, செயற்கையான ஒரு AI Bubble என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவேளை, இந்த AI Bubble வெடித்தால் கூகுள் தாக்குப்பிடிக்குமா என்று சுந்தர் பிச்சையிடம் கேட்டபோது, அவர் எச்சரிக்கை கலந்த தொனியில் பதிலளித்தார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் இந்தச் சூழ்நிலையில் இருந்து விதிவிலக்காக இருக்கப் போவதில்லை." இதன் மூலம், சந்தை சரிந்தால் பெரிய நிறுவனங்கள் கூட கஷ்டப்படும் என்பதை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
கடந்த காலத்தின் பாடம் : இந்த சூழ்நிலையை கடந்த 2000-ஆம் ஆண்டில் பல இணைய நிறுவனங்களின் மதிப்புகள் சரிந்தது குறித்து கூறிய அவர், இணையத்தின் ஆரம்ப காலத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்போது முதலீடுகள் அதிகமாக இருந்தன. ஆனால், இணையம் உலகத்தை மாற்றியது என்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று கூறியுள்ளார்.
AI-யும் அப்படித்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, இப்போது நடப்பது ஒருபுறம் சரியானதாகவும் மறுபுறம் சில சமயங்களில் உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து சாம் ஆல்ட்மேன் (OpenAI சி.இ.ஓ.) கூறுகையில், "இந்த AI Bubble பற்றிய கதைகளை எழுத பலரும் ஆவலாக உள்ளனர். உண்மை என்னவென்றால், AI தொழில்நுட்பத்தின் சில பகுதிகள் இப்போது ஒரு குமிழி போலத்தான் இருக்கின்றன" என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதேபோல், ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) கூறுகையில், வங்கிகள் தொடர்பான மிகவும் குமிழி மோசமானது, அதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், தொழில் வளர்ச்சி தொடர்பான குமிழிகள் அவ்வளவு மோசமானவை அல்ல. இவை சமுதாயத்திற்கு நன்மையைக் கூட செய்யும். ஏனெனில், குழப்பங்கள் விலகிய பின் யார் வெற்றியாளர்கள் என்று தெரிய வரும்போது, அந்தப் புதிய கண்டுபிடிப்புகளால் சமூகம் பெரிய அளவில் பலன் அடையும்" என்று தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான யூகங்களால் ஒரு பொருளின் அல்லது நிறுவனத்தின் உண்மையான மதிப்பைவிடப் பங்கு மதிப்பு அதிகரிக்கும்போது அது 'குமிழி' எனப்படுகிறது. சுந்தர் பிச்சையின் இந்த வெளிப்படையான கருத்துகள், AI துறையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications