கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து வளர்ச்சி பாதைக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதியியல், நாணயம், துறைவாரியான கொள்கை என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் மற்றும் தளர்வுகளைக் கோரியுள்ளது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
கொரோனா 2வது அலை தொற்று மூலம் 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதத்தில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை அதிகளவில் பாதித்தது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நாணய கொள்கை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கொரோனா அலை பாதிப்பை
2வது கொரோனா அலை பாதிப்பைச் சரி செய்ய நீண்ட காலத் திட்டத்தை விடவும் குறுகிய காலத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்ப நிதியியல், நாணயம், துறைவாரியான கொள்கை என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் மற்றும் தளர்வுகள் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பிரச்சனை குறைந்தது
தற்போது நாட்டின் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையிலும், வேக்சின் அளிக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ள பணிகளும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
ஆனால் 2வது கொரோனா தொற்று அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது ஆனால் முதல் லாக்டவுன் போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்
2020 ஜூன் காலாண்டில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது. இந்நிலையில் 2021 ஜூன் காலாண்டில் -12 சதவீதமாக இருக்கும் என UBS கணித்துள்ளது.