சீனா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளுக்கு ஏற்றுமதி குறைந்ததால், சரக்குகளின் அளவைக் குறைக்க விரும்பும் வைர நிறுவனங்கள் ஆகஸ்ட் 18 முதல் 10 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சீனா தங்கத்தை மட்டுமே வாங்கி வருகிறது. மேலும் அமெரிக்காவில் வைர நுகர்வு குறைந்துள்ள காரணத்தினால் வைர உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சரி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குஜராத் முழுவதும் சுமார் 500 சிறிய வைர கட்டிங் மற்றும் பாலிஷ் யூனிட்கள் தங்களது செயல்பாட்டை நிறுத்தவுள்ளன. இதனால் 70,000-75,000 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தொழிலாளர் சங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்ய இருக்கும் இந்த வைர நிறுவனங்கள் முன்னர் சூரத் மற்றும் மும்பையில் உள்ள முக்கிய ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வழங்கியுள்ளன.
பொதுவாக, குஜராத்தின் வைர உற்பத்தி தொழிற்சாலைகள் தீபாவளி நேரத்தில் நீண்ட விடுமுறையை எடுக்கும். ஆனால், ஆண்டு தொடக்கத்திலேயே வேலை நிறுத்தத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக வைர விலை உயர்ந்து, மொத்த தொழிலுக்கும் பயனளிக்கும் என்று தொழில் வட்டாரங்கள் நம்புகின்றன. தற்போது வைரத்திற்கான தேவை உலகளவில் குறைந்துள்ள காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாலிஷ்ட் வைரங்களில் 95% ஏற்றுமதி செய்யப்படுவதால், உலகளாவிய வைர சந்தையில் விற்பனை சர்வதேச காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை ஆகியவை வைர விற்பனையை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
சூரத் டைமண்ட் அசோசியேஷன் தலைவர் ஜகதீஷ் குன்ட், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை போன்ற காரணங்கள் உலகளாவிய வைர தேவை மற்றும் ஒட்டுமொத்த நகைத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டில், வைரத் தொழிலின் டர்ன்ஓவர் கிட்டத்தட்ட ரூ. 2,25,000 கோடியாக இருந்ததாகவும் ஆனால் இப்போது சுமார் ரூ. 1,50,000 கோடியாகக் குறைந்துள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக வைர விற்பனையில் சரிவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் ஜி7 நாடுகள் ரஷ்ய வைரங்களுக்கு தடை விதித்ததும் வைரத் தேவை குறைந்திருப்பதற்கான காரணங்களாக உள்ளன. உலகளாவிய வைரச் சுரங்க நிறுவனமான "டி பீர்ஸ்" ஜூன் மாதத்துடன் முடிவடையும் 2-வது காலாண்டில் தோராயமான வைர உற்பத்தியை 15% குறைப்பதாக அறிவித்தது.
இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், சூரத் வைரத் தொழிலாளர் சங்கம் சமீபத்தில் வேலை இழப்பு அல்லது நிதி சிரமங்களை சந்திப்பவர்களுக்காக உதவிக்குழு ஒன்றைத் தொடங்கியது. தொடங்கப்பட்டதிலிருந்து, வேலை இழப்பு அல்லது சம்பளக் குறைப்புடன் போராடும் நபர்களிடமிருந்து 1,600 அவசர அழைப்புகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications