சீனா, தென் கொரியா, இத்தாலி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது என்பது அதிர்ச்சியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய மைய இடமாகக் கருதப்பட்ட Wuhan மாகாணத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா இருந்தது இந்திய மக்களைப் பெரிய அளவில் பயம்புறுத்தியது. ஆனால் அவர்களுக்குச் சில நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியதால் மக்கள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் தற்போது பெங்களூரு, டெல்லி எனப் பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாமல் அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை
கொரோனா வைரஸ் மக்கள் மனத்தில் மிகப்பெரிய பயத்தை உருவாக்கியுள்ளது இதன் எதிரொலியாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர்.
அதில் முக்கியமான ஒன்று காற்று மூலம் வியாதி பரவக்கூடாது என்பதற்காக மக்கள் தற்போது அதிகளவில் மாஸ்க் (முகமூடி) வாங்கிக் குவித்து வருகின்றனர்.
ரீடைல் சந்தை
மருந்துக் கடைகள், மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக மாஸ்க் விற்பனை தாறுமாறாக அதிகரித்தது உள்ளது. அதுவும் குறிப்பாகச் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஸ்டாக் காலியாகி தட்டுப்பாடு நிலவுகிறது.
விலை
இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாகச் சந்தையில் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் விலை 10 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட 300 சதவீத விலை உயர்வு.
விலை உயர்வைக் கண்டு மக்கள் வருந்தினாலும், வேறு வழி இல்லாமல் வாங்கி வருகின்றனர். இதனை யாராலும் எதிர்த்தும் கேள்வி கேட்கவில்லை. காரணம் சந்தையில் தட்டுப்பாடு.
பிற பொருட்கள்
சர்ஜிக்கல் மாஸ்க் மட்டும் அல்லாமல் N95 மாஸ்க், சேனிடைசர் போன்ற இதர கிருமி நாசினிகளின் விலையும் அதிகளவில் விலை உயர்ந்துள்ளது, சந்தையில் இதற்கு அதிகளவிலான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே மக்கள் மூன்கூட்டிய திட்டமிட்டுத் தேவையான பாதுகாப்பு பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்.
சுகாதார ஊழியர்கள்
தற்போது சாமானிய மக்களை விடவும் அதிகளவில் ஆபத்தில் இருப்பது சுகாதார மற்றும் துப்புரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் தான். மக்களைக் காப்பாற்றுவதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications