அரசாங்க ஆவணங்களில் முக்கியமான ஆவணம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு. இரண்டையுமே பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அது மட்டும் இன்றி ஒருவர் ஒரே ஒரு பான் கார்டை மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். இதனை பின்பற்றாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் நபர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை விரிவாக பார்ப்போம்.
பான் கார்டுகளில் பிழை இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல பான் கார்டு காணாமல் போனால் மீண்டும் இன்னொரு டூப்ளிகேட் பான் கார்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. வங்கி கணக்கோடு தொடர்புடையதாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருப்பதால் ஒருவர் ஏதேனும் மோசடி செயல்களில் ஈடுபட்டால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
மேலும் நீங்கள் 2 பான் கார்டுகளோடு பிடிபட்டால் வருமானவரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். வருமான வரித்துறையின் விதிகளின்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் அனைவரிடமும் மோசடி செய்வதற்காக மட்டுமே 2 பான் கார்டுகள் இருக்கும் என்று கூறிவிட முடியாது.
ஏனெனில் ஒருவர் பான் கார்டு பெற விண்ணப்பித்திருக்கும்போது அது வருவதற்கு காலதாமதம் ஏற்பட்ட காரணங்களினால் மீண்டும் அவர் பான் கார்டு பெற விண்ணப்பித்திருக்கலாம். இன்னும் சிலர் அறியாமையின் காரணமாக பான் கார்டு விண்ணப்பித்த பிறகு அதில் ஏதேனும் பிழை இருந்தால், அதனை அப்டேட் செய்வதற்கு பதிலாக மீண்டும் விண்ணப்பித்து இன்னொரு பான் கார்டை பெற்றுவிடுவார்கள்.
அதே போல திருமணத்திற்குப் பிறகு கணவருடைய பெயரை தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்ளும் பெண்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் போது சிலர் தெரியாமல் புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து விடுகின்றனர். இதுபோன்ற பெண்களிடமும் 2 பான் கார்டுகள் இருக்கும்.
மோசடி காரணங்கள்: மேலே கூறிய பட்டியலில் இல்லாதவர்கள் மோசடிக்காகவும் 2 பான் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற காரணங்களால் உங்களிடம் 2 பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை ஒப்படைப்பது எப்படி? என்பதை பார்ப்போம்.
பான் கார்டை ஒப்படைப்பதற்கான ஆஃப்லைன் செயல்முறை:
ஸ்டேப் 1: "Request For New PAN Card Or/And Changes Or Correction in PAN Data" படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்யவும்.
ஸ்டேப் 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள NSDL மையத்தைப் பார்வையிடவும்.
ஸ்டேப் 3: படிவத்தை சமர்ப்பித்தவுடன் அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை பெறுங்கள்.
ஸ்டேப் 4: அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை, 15 நாட்களுக்குள் NSDLக்கு அனுப்பவும்.
ஸ்டேப் 5: டூப்ளிகேட் பான் கார்டை, ரத்து செய்யக் கோரும் கடிதத்தை உங்கள் மதிப்பீட்டு அதிகாரிக்கு எழுதுங்கள். மேலும், உங்கள் உள்ளூர் வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியைப் பார்வையிடவும். PAN தொடர்பான கடிதத்தை சமர்ப்பித்து, ரத்துசெய்யக் கோரவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications