ஷிவ் நாடார், அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி ஆகியோர் நம் நாட்டில் புகழ்பெற்ற நன்கொடையாளர்கள் ஆவர். உலகளவில் நீண்டகாலமாக நன்கொடைகளில் ஈடுபட்டவர்களில் இவர்களது பெயரும் இடம் பெற்று வருகிறது.
இதனிடையே ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலில் சுஷ்மிதா பாக்சி, சுப்ரதோ பாக்சி என்ற ஒரு தம்பதி இடம் பெற்றுள்ளனர், 2023 ஆம் ஆண்டு ஈடல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மிகப் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்த தம்பதியர் 6 ஆவது இடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு அவர்கள் ரூ.110 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். இது தவிர தனிப்பட்ட முறையில் சுஷ்மிதா பாக்சி ரூ.213 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையை சமூக நலனுக்காக தானமாக அளித்தபோதிலும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கவே சுஷ்மிதா பாக்சி விரும்புகிறார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் சுஷ்மிதா பாக்சி பிறந்தார். அவரது தாயார் பிரபல எழுத்தாளர் சகுந்தலா பண்டா ஆவார். தனது தாயின் எழுத்தால் கவரப்பட்ட சுஷ்மிதாவும் சிறந்த ஒடியா எழுத்தாளரானார். சுசரிதா என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார்.
பொலிட்டிகல் சயின்ஸில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள சுஷ்மிதா தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றினார்.
சுஷ்மிதாவுக்கு 15 வயது இருக்கும்போது அவரது கணவரான சுப்ரதோ பாக்சி அறிமுகமானார். அதற்கடுத்த நான்காண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சுஷ்மிதாவின் படைப்புகள் முதலில் பல இதழ்களில் வெளியாகின . அம்மாவைப் போலவே இலக்கியத் துறையில் நுழைந்தார் சுஷ்மிதா. மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக சுஷ்மிதா பாக்சி விளங்குகிறார், மேலும் அவர் ஒரு திறமையான எழுத்தாளர்.
பயணக் குறிப்பு, பல சிறுகதைகள் தொகுப்பு, ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம் மற்றும் ஒடியாவில் சுஷ்மிதா எழுதுகிறார்.
சுஷ்மிதா, சுப்ரதோ பாக்சி, ராதா, என்.எஸ் பார்த்தசாரதி மற்றும் பிற மைண்ட்ட்ரீ இணை நிறுவனர்கள், அறக் கொடையாளர்கள் 2022 ஆம் ஆண்டில் சுகாதாரத் தொழிலின் முன்னேற்றத்துக்காக மொத்தம் ரூ. 213 கோடியை நன்கொடையாக வழங்கினர். 2023 ஆம் ஆண்டில், சுஷ்மிதாவும் சுப்ரதோவும் ரூ. 110 கோடி நன்கொடை அளித்தனர்.
உளவியல் ஆரோக்கிய பிரச்னையை கையாளும் எவரும் அல்லது எந்தவொரு குடும்பமும் தனது முதல் ஆங்கில நாவலின் முக்கிய கதாபாத்திரமான ஒரு மனநல மருத்துவரை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று சுஷ்மிதா பாக்சி கூறுகிறார். அவரது எழுத்தின் நடை, தொடர்புத்தன்மை காரணமாக அவரது வாசகர்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications