உலகம் முழுவதும் மின்னணு சாதனங்கள், கார்கள், மின்சார வாகனங்கள், காற்றாலைகள், மருத்துவ கருவிகள் என முக்கியமான பொருட்களின் உற்பத்திக்கு அரிய வகை காந்தம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிய வகை காந்தம் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த அரிய வகை காந்தத்தை பிரித்தெடுப்பது மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டது. இதில் சீனாவே நிபுணத்துவம் பெற்றுள்ளது. எனவே உலகம் முழுவதும் இருக்கும் உற்பத்தியாளர்கள் இவ்வகை காந்தத்தை சீனாவிடம் இருந்து மட்டுமே பெற்று வந்தனர். ஆனால் அதில் தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. மேலும் தங்கள் நாடு மட்டுமே சப்ளை செய்து வந்த அரிய வகை காந்தத்தின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது.
சீனா அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்விப்ட் (Swift) ரக கார்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார்ஸின் பிரதான மாடல் காராக ஸ்விப்ட் ரக கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாக கூடிய ஒரு காராகவும் இது உள்ளது. இந்த சூழலில் தான் சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் தற்காலிகமாக ஸ்விப்ட் ரக காரர்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ராய்ட்டர்ஸ் நிறுவனமும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. சீனா தங்கள் நாட்டில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக கார் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்காமல் இருப்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த மே 26 ஆம் தேதியிலிருந்து உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக ஸ்விப்ட் கார்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என சுசுகி மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு ஸ்விப்ட் கார்களில் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார்கள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன் 13ஆம் தேதியிலிருந்து ஸ்விப்ட் ரக கார்கள் உற்பத்தியை பகுதியளவும், ஜூன் 16ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் முழுமையாகவும் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதற்குள் சீனா இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி துறைக்கான உபகரணங்கள் ,மருத்துவ உபகரணங்கள் ,பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் மற்றும் வாகன உற்பத்திக்கான உபகரணங்களுக்கு பல்வேறு நாடுகளும் பயன்படுத்தக்கூடிய அரியவகை காந்தம் சீனாவில் தான் கிடைக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சீனா இந்த அரியவகை காந்தத்தின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் உற்பத்தியே பாதிக்கப்படும் சூழல் உண்டாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications