டெல்லி: இந்தியாவில் மக்களின் முதலீடுகள் தங்க நகைகளை மட்டுமே நோக்கி இருந்த நிலையில் அதன் திசையை மாற்றவும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை போக்கவும் மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கணிசமான லாபத்தை ஈட்டி வருகின்றனர். பொதுவாக இதில் 8 ஆண்டுகள் கழித்து தான் முதிர்வு காலம் வரும். இருந்தாலும் 5 ஆண்டுகள் முழுமை அடைந்த பின்னர் மக்கள் பத்திரங்களை விற்பனை செய்து பணமாக்கலாம். தங்க பத்திர திட்டத்தில் 2017 -18 ஆம் ஆண்டில் பத்தாவது கட்டமாக தங்க பத்திரங்களை அரசு வெளியீடு செய்தது .
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த தங்க பத்திரங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2961 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பத்திரங்களை 5 ஆண்டுகள் முடிந்து தற்போது விற்பனை செய்ய முடியும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது இந்த பத்திரங்களை விற்பனை செய்தால் கூட செய்த முதலீட்டில் இருந்து 158 சதவீத லாபத்தை பெற முடியும். அதாவது ஒரு கிராம் தங்கம் 7,646 என்ற அளவில் இவர்களுக்கு திரும்ப கிடைக்கப் போகிறது. தங்கத்தை நகையாக வாங்குவதற்கு பதிலாக மக்கள் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கொண்டு வந்தது.
இதன்படி ஒரு ஆண்டில் நான்கு முறை தங்க பத்திரங்கள் வெளியீடு செய்யப்பட்டன. இதில் ரிசர்வ் வங்கி ஒரு கிராம் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அந்த அளவிற்கு மக்கள் எத்தனை கிராம்களாக வேண்டுமோ அத்தனை கிராம்களுக்கு பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவை முதிர்ச்சி அடையும் என்றும் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி இதற்கு வழங்கப்படும் என்றும் அப்போது மத்திய அரசு அறிவித்தது.
அந்த வகையில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட பத்தாவது கட்ட தங்க பத்திரங்கள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பத்திரங்களை முதிர்வு காலத்திற்கு முன்னர் ஆனால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை செய்பவர்களுக்கு வரி சலுகைகளும் கிடைக்கின்றன. அதாவது வருமான வரி சட்டத்தின் படி, இதில் கிடைக்கும் வருமானத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படாது. எனவே இதனை வருமான வரி கணக்கு தாக்கலின் போது கூட வருமானமாக குறிப்பிடத் தேவையில்லையாம்.
Written by: Devika
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications