கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் மழையின் நடுவே குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி நபர் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
இந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்விக்கி நிறுவனம் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நெட்டிசன்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்குவதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குதிரையில் சென்ற அந்த நபரை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி டெலிவரிமேன்
மும்பையில் மழை நேரத்தில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர் யார் என்பதை தற்போது கண்டுபிடித்து விட்டதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.
தேடும் பணி
இதுகுறித்த தகவல் ஸ்விக்கி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் பெரும் முயற்சி செய்தும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
ரூ.5000 பரிசு
இதனை அடுத்து ஸ்விக்கி நிறுவனம் அந்த நபரை கண்டுபிடிக்க நெட்டிசன்களின் உதவியை நாடியது. மும்பை மழை நேரத்தில் குதிரையில் சென்று டெலிவரி செய்த நபர் யார் என்று கண்டுபிடிக்க உதவும் நெட்டிசன்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து நெட்டிசன்களும் அந்த நபரை தேடி வந்தனர்.
கண்டுபிடிப்பு
இந்த நிலையில் தற்போது ஸ்விக்கி நிறுவனம் இறுதியாக அந்த நபரை அடையாளம் கண்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. மும்பையில் குதிரையில் சென்ற இளைஞன் மற்றும் குதிரை ஆகிய இரண்டையும் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்றும் ஆனால் இதில் விசேஷம் என்னவெனில் அந்த நபர் ஸ்விக்கி நிறுவனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறியுள்ளது.
17 வயது இளைஞர்
குதிரையில் சென்ற நபர் தன்னுடைய நண்பரிடம் டெலிவரி பேக்கை கடன் வாங்கி உள்ளார் என்றும் கடன் வாங்கியதை திருப்பித் தராமல் இருந்ததால்தான் இந்த குழப்பம் வந்ததாகவும் ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த நபரின் பெயர் சுஷாந்த் என்றும் அவர் 17 வயது உடைய இளைஞர் என்றும் அவர் தனது அறையில் தங்கியிருந்த ஸ்விக்கி நிறுவன ஊழியரிடம் சில பொருட்களை கடன் வாங்கி உள்ளார் என்றும் அதில் ஒன்று டெலிவரி பேக் என்றும் அதனை அவர் திருப்பி தராமல் அதை தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தியதை அடுத்தே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பரிசு
இதனையடுத்து இதுகுறித்த வீடியோவை முதன் முதலாக இணையதளத்தில் பதிவு செய்து வைரலாக்கிய நபருக்கு ஸ்விக்கி நிறுவனம் ரூ.5000 பரிசளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications