நாட்டின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி அதன் ஐபிஓவை வெளியிட செபியின் ஒப்புதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.25 பில்லியன் டாலர் அளவிற்கு நிறுவனம் ஐபிஓ வெளியிடலாம் என்று கூறப்பட்டுகிறது. நிறுவனம் இப்போது புதுப்பிக்கப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை தாக்கல் செய்யும். இது 21 நாள் பொது கருத்துகளை பெறுவதை அனுமதிக்கிறது.
இதற்கிடையில் ஸ்விக்கியின் இந்த ஐபிஓ புதிய மூலதனமாக ரூ.3,750 கோடியையும், விற்பனைக்கான சலுகை மூலம் ரூ.6,664 கோடியையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Prosus மற்றும் SoftBank போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை விற்கலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்விக்கி அதன் 1.25 பில்லியன் டாலர் ஐபிஓவிற்காக இந்த ஆண்டு ஏப்ரலில் ரகசியத் தாக்கல் செய்யும் வழியின் மூலம் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியிடம் ஐபிஓவுக்கான வரைவுத் தாள்களை தாக்கல் செய்தது. தற்போது செபி ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஸ்விக்கி இப்போது புதுப்பிக்கப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (UDRHP) செபியிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த புதிய புதுப்பிக்கப்பட்ட தாக்கலில் ஐபிஓ தொடங்கும் முன் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படும். இதற்காக 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
ஸ்விக்கியின் 33% பங்குகளைக் மிகப்பெரிய பங்குதாரரான Prosus போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் SoftBank தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்க வாய்ப்புள்ளது. அதேபோல், மற்ற முக்கிய முதலீட்டாளர்களில் அச்செல் (Accel), எலிவேஷன் கேபிட்டல் (Elevation Capital), மெயிடுவான் (Meituan), டென்செண்ட் (Tencent), நார்வெஸ்ட் வென்சர் பார்ட்னர் (Norwest Venture Partners), டிஎஸ்டி குளோபல் (DST Global), கோவட்யூ (Coatue), இன்வெஸ்கோ (Invesco) மற்றும் ஜிஐசி (GIC) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இதற்கிடையில், நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஸ்விக்கி ரூ.1,600 கோடி நஷ்டத்துடன் ரூ.5,476 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதன் முக்கிய போட்டியாளரான ஜொமாட்டோ, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ.12,114 கோடி வருவாயைப் பதிவுசெய்தது. அதே காலகட்டத்தில் ரூ.351 கோடி நிகர லாபத்துடன் லாபம் ஈட்டியுள்ளது.
ஜொமாட்டோ ஜூலை 2021 இல் அதன் ஐபிஓ மூலம் ரூ. 9,375 கோடியை திரட்டியது. நிஃப்டியின் 32% ஆதாயத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் பங்கு 192% உயர்ந்துள்ளது. ஐபிஓவின் போது முதலில் 76 ரூபாய்க்கு வழங்கப்பட்ட ஜொமாட்டோ பங்குகள் இன்று 291.70 ரூபாயில் முடிந்தது.
முன்னதாக செபி 2022 ஆம் ஆண்டில் முன் தாக்கல் (pre-filing) செய்யும் வழியை அறிமுகப்படுத்தியது. இது நிறுவனங்களை பூர்வாங்கத் தாக்கல்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க அனுமதிக்கிறது. அதேபோல், நிறுவனங்களுக்கு வெளியீட்டு அளவைத் தீர்மானிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதனால், புதுப்பிக்கப்பட்ட வரைவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் வரை முன்மொழியப்பட்ட புதிய பங்குகளின் எண்ணிக்கையை 50% வரை சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications