கடந்த மார்ச் 2020-ல் தான், இந்தியா முழுக்க கொரோனா வவைரஸ் பரவாமல் இருக்க, கொஞ்சம் கடுமையான லாக் டவுன்களை எல்லாம் மத்திய அரசு அறிவித்தது.
இதன் விளைவாக, தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாமல், பல்வேறு ஸ்டார்ட் அப் கம்பெனிகள், தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
அதில் இந்தியாவின் உணவு டெலிவரி கம்பெனிகளில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனமும் ஒன்று. தற்போது மேலும் ஊழியர்களை லே ஆஃப் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
லே ஆஃப் முதல் கட்டம்
கடந்த மே 2020-ல் ஸ்விக்கி நிறுவனம், இந்தியா முழுமைக்கும் இருக்கும் பல்வேறு அலுவலகங்களில் இருந்து, சுமாராக 1,100 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஸ்டார்ட் அப் கம்பெனிகள் என்றால் இது போன்ற சவால்கள், திடீர் வேலை இழப்புகள் எல்லாம் இருக்கத் தானே செய்யும்? என ஒரு மாதிரி கடந்தார்கள்.
மீண்டும் லே ஆஃப்
ஆனால் இப்போது மீண்டும் 350 ஊழியர்களை, இந்த உணவு டெலிவரி கம்பெனி லே ஆஃப் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். கொரோனா லாக் டவுனுக்குப் பின், வியாபாரம் 50 சதவிகிதம் தான் தேறி இருக்கிறதாம். எனவே மீண்டும் 350 பேரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி.
லே ஆஃப் தொடருமா
இந்த இரண்டாவது லே ஆஃப்-க்குப் பின் எந்த ஒரு லே ஆஃப்-ம் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி நிறுவனம். தற்போது வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம், டிசம்பர் 2020 வரை ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற நஷ்ட ஈடுகளும் சலுகைகளும் வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்விக்கி.
113 மில்லியன் டாலர் ஃபண்டிங்
இந்த பிப்ரவரி 2020-ல் தான், ஸ்விக்கி கம்பெனி, 113 மில்லியன் டாலர் தொகையை ஃபண்டிங் வழியாகத் திரட்டியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவின் இணைய தாதாவான நாஸ்பர்ஸ் (Naspers) தான் ஸ்விக்கி கம்பெனியில் 40.56 % பங்குகளை வைத்திருக்கிறது. இந்த 113 மில்லியன் டாலர் ஃபண்டிங்குக்குப் பிறகு, ஸ்விக்கி கம்பெனியின் மதிப்பு 3.6 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications