மத்திய அரசு கடந்த 21ஆம் தேதி நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 1950 மற்றும் 60களில் கொண்டுவரப்பட்ட பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் கிக் பணியாளர்கள் எனப்படும் டெலிவரி வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு பலன்களை வழங்கி இருக்கிறது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், காப்பீடு உள்ளிட்ட அனைத்து பலன்களும் கிக் பணியாளர்களுக்கும் இனி கிடைக்கும். கிக் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த அரசு தனி நிதியை தொடங்க உள்ளது.

கிக் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை இந்த நிதிக்காக வழங்க வேண்டும். இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக கிக் பணியாளர்கள் இருக்கின்றனர். அமேசான் , ஸ்விக்கி, ஸோமேட்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ போன்ற தளங்களில் இணைந்து டெலிவரி வேலையில் ஈடுபடுபவர்களே கிக் பணியாளர்கள் என அழைக்கிறோம்.
இந்த சூழலில் புதிய தொழிலாளர் சட்டம் கிக் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பலன்களை வழங்குகிறது. அவர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் இதற்காக பங்களிப்பு தர வேண்டும் . தங்களின் வருவாயில் ஒரு கணிசமான தொகையை பங்களிப்பாக தர வேண்டும் என கூறியிருக்கிறது அரசு.

கோடக் நிறுவனம் வெளியிடக்கூடிய தகவலின் பதில் நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தில் 1- 2 சதவீதம் தொகையை கிக் பணியாளர்களின் சமூக நலத் திட்டங்களுக்காக வழங்கி ஆக வேண்டும். அதாவது கிக் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தில் 5 சதவீதம் தொகையை அரசின் சமூக பாதுகாப்பு நிதிக்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும். அப்படி என்றால் ஒரு உணவு டெலிவரிக்கு 3.2 ரூபாய் , ஒரு குயிக்காமர்ஸ் ஆர்டருக்கு 2.4 ரூபாய் என்ற அளவில் நிறுவனங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி வழங்க வேண்டும் என கூறுகிறது.
நிறுவனங்கள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்த போகின்றன என கோடக் நிறுவனம் கூறுகிறது. கூடிய விரைவில் இந்த நிறுவனங்கள் தங்களுடைய டெலிவரி கட்டணங்களை மாற்றி அமைக்க உள்ளன என்றும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப டெலிவரி கட்டணம், பிளாட்பார்ம் கட்டணம் உள்ளிட்டவறை உயர்த்தும் என்றும் கூறுகிறது. எனவே அன்றாடம் ஸ்விக்கி, சோமேட்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ ஆகியவற்றை பயன்படுத்துவோர் இனி கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications