கொரோனா தொற்று காலத்தில் கூட பாதிக்காத வகையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பது மூலம் சர்வதேச நிதி சந்தை கடுமையாக பாதித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரையில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் பேங்க், சில்வர்கேட் பேங்க் ஆகிய 3 வங்கிகள் வங்கி சேவைகளை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் பணப்புழக்க பிரச்சனையில் மாடிக்கொண்டது.
இந்த நிலையில் கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் சூயிஸ்
கிரெடிட் சூயிஸ்-ன் முக்கிய முதலீட்டாளரும், பங்குதாரருமான சவுதி நேஷ்னல் வங்கி -யின் சேர்மன் Ammar Al Khudairy, எங்களால் இனி கிரெடிட் சூயிஸ் பங்கு இருப்பை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கிரெடிட் சூயிஸ் பங்குகள் சுமார் 30 சதவீதம் வரையில் சரிந்து வரலாற்று சரிவை சந்தித்தது.
Swiss National Bank உதவி
இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக Credit Suisse தனது பணப்புழக்க பிரச்சனையை சரி செய்ய சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank -ல் இருந்து 54 பில்லியன் டாலர் அதாவது 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிலான தொகையை கடனாக பெற்றது.
UBS, கிரெடிட் சூயிஸ்
இந்த 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் கடன் மூலம் கிரெடிட் சூயிஸ் பணப்புழக்க பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் வங்கியின் வலிமை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.இந்த நிலையில் தான் சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் UBS, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதியை வாங்கவோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை
இதற்காக UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை துவங்க முக்கியமான காரணம் சுவிஸ் நேஷ்னல் வங்கி மற்றும் அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்பான FINMA உந்துதல் தான். UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகள் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
சுவிஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெள்ளிக்கிழமை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளை இணைப்பது தான் எங்களுடைய பிளான் A என தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிரெடிட் சூயிஸ் வங்கியில் தீர்க்க முடியாத பிரச்சனை உள்ளது உறுதியாகியுள்ளது.
ஐரோப்பிய வங்கி அமைப்பு
இந்த இணைப்பு உறுதியாகும் பட்சத்தில் ஐரோப்பிய வங்கி அமைப்பு வீழ்ச்சி அடைவதில் இருந்து காப்பாற்றப்படும். இதேபோல் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கியின் சொத்துக்கள் பணம் அனைத்தும் பிரிட்ஜ் வங்கிக்கு மாற்றப்பட்ட நிலையில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாவதாக அறிவித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
திக் திக் நேரம்
இதை தொடர்ந்து அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாக காத்திருக்கும் நிலையிலும், UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளை இணைப்பு முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் அடுத்த ஒரு வாரத்திற்கு முதலீட்டு சந்தைக்கும், நிதியியல் சந்தைக்கும் திக் திக் நேரம் தான்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications