சுவிட்சர்லாந்து நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுவிஸ் நாட்டில் உள்ள அதிகாரிகள் மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும். இந்தத் திட்டத்தில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமும் உள்ளதாக டெலிகிராப் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் சிவிஸ் அந்தர் பல்டி அடிக்க உள்ளது.
ஆட்டோமொபைல் துறை
சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் தலைகீழாகப் புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் 100 வருடங்களுக்கும் அதிகமாகப் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்தியும், உற்பத்தி செய்தும் வந்த நிலையில் எலக்ட்ரிக் கார் தான் எதிர்காலம் என அனைவரும் நம்பும் நேரத்தில் முக்கியமான பிரச்சனை உருவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து
உலகில் தனிநபர் வருமான அளவில் உயர்மட்ட அளவில் இருக்கும் சுவிஸ் பல முக்கியமான மாற்றத்தையும், கிரீன் எனர்ஜியை ஆதரிக்கும் அனைத்தும் முயற்சிகளை மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டு வந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மின்தடை மற்றும் மின்வெட்டு
மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் நடந்தால், சுவிட்சர்லாந்து தான் உலகிலேயே எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்த முதல் நாடாக மாறும்.
எனர்ஜி தேவை
சுவிட்சர்லாந்து நாட்டில் அதன் எனர்ஜி தேவைகளைப் பூர்த்திச் செய்ய நீர் மின்சாரத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது, இந்நாட்டின் மின்சாரத்தில் 60 சதவீதம் நீர் மின்சாரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த நிலையில் குளிர்காலத்தில் பணி உருவாகும் காரணத்தால் மின்சார உற்பத்தி குறைகிறது.
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி
இத்தகைய காலக்கட்டத்தில் அண்டை நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்தும் மின்சாரத்தை இறக்குமதி செய்கிறதுய இவை இரண்டும் இப்போது உக்ரைன் போரின் காரணமாக மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல என எனர்ஜி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
பிரான்ஸ்
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் யூடிலிட்டி EDF அமைப்பு 2022 ஆம் ஆண்டில், அணு உலை செயலிழந்ததன் காரணமாக, அதன் மின் உற்பத்தி 30 ஆண்டுகளில் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் மின்சாரம், எரிபொருள் என அனைத்து எனர்ஜி பற்றாக்குறையும் உருவாகியுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளை அதிகம் நம்பியிருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டிலும் இந்தப் பாதிப்பு அதிகமான காரணத்தால் மின்தடை மற்றும் மின்வெட்டுகளைத் தடுக்க எலக்ட்ரிக் வாகனங்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications