கொச்சின்: கேரள மாநிலத்தின் கொச்சின் விமான நிலையத்திற்குள் டாடா குழுமம் அமைத்திருக்க கூடிய பிரம்மாண்டமான தங்கும் விடுதி வரும் 28ஆம் தேதி கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனால் திறக்கப்பட இருக்கிறது.
கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்குள் டாடா நிறுவனம் தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் என்ற பெயரில் ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை கட்டமைத்துள்ளது. 28ஆம் தேதி இதனை கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் திறந்து வைக்க இருக்கிறார். விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்திருக்க கூடிய தாஜ் கொச்சின் சர்வதேச விமான நிலைய தங்கும் விடுதி பல்வேறு பிரிமியம் வசதிகள் கொண்ட கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடையின் கீழ் உலக தரத்திலான உள்கட்டமைப்பையும் இந்தியாவிற்கே உகந்த விருந்தோம்பலையும் ஒருங்கிணைத்து தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான விருப்பமான தளமாக கேரளா மாறி வருகிறது என்றும் இதனை மேம்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதி மேற்கொண்டு பயணிகளை ஈர்க்கும் என்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தான் கொச்சின் சர்வதேச விமான நிலையம் சார்பாக நவீன வசதிகள் கொண்ட பயணிகள் தங்கும் இடங்கள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏரோ லவுஞ்ச் என்ற பெயரில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஆடம்பரமான வசதிகள் கொண்ட 42 அறைகள் இருக்கின்றன.
குறைந்த கட்டணத்திலேயே பயணிகள் இங்கு சென்று தங்கிக் கொள்ள முடியும். அது தவிர ஸ்பா, ஜிம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தக்கூடிய அறைகள் என பல்வேறு வசதிகள் கொண்டதாக இந்த ஏரோ லவுஞ்ச் அமைந்திருக்கிறது.
தற்போது புதிதாக கட்டப்பட்டு இருக்கக்கூடிய தாஜ் கொச்சின் இன்டர்நேஷனல் தங்கும் விடுதி 111 பிரீமியம் அறைகளைக் கொண்டதாக இருக்கிறதாம். இதற்குள் பிரத்தியேகமான உணவகம் குறிப்பாக சர்வதேச உணவுகளும் கிடைக்கக் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கிறது . இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கொச்சின் விமான நிலையத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச முனையத்தை விரிவாக்கம் செய்வது, விளையாட்டு மைதானங்களை அமைப்பது என பல்வேறு திட்டங்கள் கையில் இருப்பதாக கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications