வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பற்பல அறிவிப்புகள் இன்று வெளியாகின.
அதில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தைகளில் வீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம்.
உண்மையில் இது வரவேற்கதக்க திட்டம் எனலாம். ஒரு நாளைக்கு பல ஆயிரம் கிலோ காய்கறிகள் வீணாகின்றன. ஆக அதனை பயன்படுத்தி உரம் தயாரிப்பு என்பது மிக நல்ல விஷயமே.
எவ்வளவு ஒதுக்கீடு
இது குறித்து இன்று பட்ஜெட் தாக்கலின் போது வெளியான அறிவிப்பில், 25 உழவர் சந்தைகளில் 2.75 கோடி ரூபாயில் உரங்கள் தயாரிக்கும் விதமாக கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீணாகும் காய்கறிகளை வீணாக குப்பைகளில் வீசி எறியாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் உரங்களாக மாறும்.
புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்
இதனால் சுற்று சூழலும் மேம்படும். உரமும் தயாரிக்க முடியும். மொத்தத்தில் இது வரவேற்க தக்க நல்ல விஷயம் என சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இன்றைய பட்ஜெட்டில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பலகைகளில் விலை நிலவரம்
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவரங்கள் டிஜிட்டல் பலகைகளில் அறிவிக்க வழிவகை செய்யப்படும். முதல் கட்டமாக வரத்து அதிகளமுள்ள, 50 உழவர் சந்தைகள், 50 விற்பனை கூடங்களில் இந்த செயல்முறையானது செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
தமிழகத்தில் உழவர் சந்தைகள் மூலம் தினசரி சுமார் 2000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் சுமார் 8000 விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உழவர் சந்தைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய துறைக்கு நல்ல திட்டம்
தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் வீணாகும் காய்கறிகள் உரமாக்கப்பட்டு மீண்டும், உரமாக விவசாயித்திற்கு பயன்படுத்தப்படும். இது விவசாய பொருட்கள் உற்பத்தியினை ஊக்குவிக்கும். தரமான உரமாகவும் அமையும். மொத்தத்தில் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் இது விவசாய துறையினருக்கு மிக நல்ல திட்டமே.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications