தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட்டினை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த பட்ஜெட்டினை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பட்ஜெட் அறிக்கையில் அனைத்து துறைகளுக்குமான வரவு செலவு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
வழக்கமான பட்ஜெட்
இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலின்போது வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன?
இந்த வேளாண் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்கால விவசாய முறைகள் ஊக்குவிக்கப்படலாம்
மேலும் பாரம்பரிய விதைகள் மற்றும் பழங்கால விவசாய முறைகளை ஊக்குவிக்கும் விதமாக மானியங்கள் வழங்கப்படலாம். இயற்கை உரங்கள் ஊக்குவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு
விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்கள், விவசாயக் கடன், பயிர்கடன், என பலவற்றினை பற்றிய முக்கிய அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவி வருகின்றது. இது உற்பத்தியினை பெருக்கவும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.