சென்னை: மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பல வருடங்களாக மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும், தமிழ்நாட்டின் மூலம் பெரும் ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு கொடுக்கும் பங்கீடு குறித்தும், மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்துத் தான் இந்தியாவின் வளர்ச்சியே உள்ளது என ஐஎம்எப் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டுமெனில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மூன்று தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வளர வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் செய்கிற்குழு உறுப்பினரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் தான் இந்தியாவின் வளர்ச்சியும் வேகமெடுக்கும் என்பது சுப்ரமணியன் அவர்களின் பேச்சு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
சென்னை CII அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன், "ஜப்பான் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டில் 215 பில்லியன் டாலரிலிருந்து 1995-ஆம் ஆண்டில் 5.1 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. இது 25 மடங்கு வளர்ச்சியாகும். அதேபோல், இந்தியாவும் தனது வளர்ச்சி விகிதத்தை தற்போதைய 7 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக அதிகரித்தால் 55 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியும்" என்றார்.
ஒரு நாடு கீழ் மட்டத்தில் இருந்து, நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் போது அதன் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிடும், இந்த நிலையைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருப்பதாகவும், இதற்கு உற்பத்தித் துறையை வளர்ப்பது முக்கியம் என்றும் கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன் கூறினார்.
"ஒரு கூட்டாட்சி அமைப்பில் அதிகாரம் இருக்கும். ஆனால் அதிகாரம் மற்றும் பொறுப்பு என்பது இரண்டு வெவ்வேறு பக்கங்கள். அதிகாரம் பற்றி மட்டுமே பேசி பொறுப்பை ஏற்காமல் இருக்க முடியாது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் டிராப் பிரச்சனையைத் தவிர்க்க உற்பத்தித் துறை வளர்ச்சி மிகவும் முக்கியம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்க வேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி வி சுப்ரமணியன், மாநில அரசுகள் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். நிலங்களை ஒதுக்குதல் மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அனுமதிகளை விரைவாக வழங்குவது போன்றவை மிகவும் முக்கியம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications