தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களையும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் நடக்கிறது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் அடுத்தடுத்த இந்திய அரசியல் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவன் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் Gyanesh Kumar, 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் குறித்து முழு அறிவிப்பை வெளியிட்டார்.

17.4 கோடி வாக்காளர்கள்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, இந்த மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் உறுதியாக பதிவாக வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
2.18 லட்சம் வாக்குச் சாவடிகள்
இந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக 2.18 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல 5 மாநிலத்திலும் வாக்குசாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வசதியாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்காளர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
இந்த தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்காக சுமார் 8.5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் அனைத்து வாக்குச் சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாக்கு சதவீதம் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முடிவுகள் எப்போது?
இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் அட்டவணை
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆகும்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் ஏப்ரல் 9 வரை திரும்ப பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளன.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications