தமிழ்நாட்டில் தொழில் மற்றும் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மற்றும் உலக நாடுகளின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதிதாக சுமார் 62 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துவங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூடிய விரைவில் சுமார் 62 முதலீடுகள் வாயிலாக சுமார் 39,941 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
2020ல் தமிழ்நாட்டில் லோசார், ஏசி, எலக்ட்ரிக் வாகனம், ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன், கம்பியூட்டர் கருவிகள் என பலதரப்பட்ட பொருட்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் தற்போது புதிதாக 62 நிறுவனங்களின் சுமார் 39,941 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக இடைக்கால பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இப்புதிய முதலீட்டு மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் முடியும் எனவும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.