15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்யவுள்ளார்.
இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும். இந்த முறை தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனைக்கு மத்தியில், தமிழகமும் கொரோனாவால் சிக்கித் தவித்து வரும் நிலையில், பல வகையிலும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.
குறிப்பாக விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு இலவச தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்தான அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இது குறித்தான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்தாம அறிவிப்புகள் வருமா என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
அதோடு கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. ஆக இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இந்த பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகிறது என்று சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.