15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்து வருகிறார்.
இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும்.
மத்திய மாநில அரசுகள் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மின்சார பேருந்துகள்
குறிப்பாக 2000 மின்சார பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் புதியதாக கொள்முதல் செய்யப்படும் என்று, தனது பட்ஜெட் அறிவிப்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளார். இதற்காக பட்ஜெட்டில் 1580 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கோவையில் மெட்ரோ ரயில்
அதுமட்டும் அல்லாது கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயத்தூறுக்கு அறிவித்திருப்பது நல்ல விஷயம் தான்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
இந்த திட்டங்கள் மேற்கொண்டு தமிழத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பே, எரிபொருட்கள் மீதான வரியினை குறைக்க வேண்டும் என்பது தான். ஆக இது நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
முக்கிய எதிர்பார்ப்பு
எப்படி இருப்பினும் தமிழக அரசின் கடன் சுமையானது 5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், இந்த திட்டங்களை எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே. எப்படி இருந்தாலும் தமிழக்கத்தில் மீண்டும் ஒரு மெட்ரோ நகரத்தில் மெட்ரோ ரயில் என்பது மிக வரவேற்க தக்க விஷயம் தானே.