சென்னை: தமிழ்க சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
திமுக அரசு 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியினை பிடித்த நிலையில், தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் என்பது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த காலை உணவு திட்டமானது 500 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி துறைக்கு?
இதே பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பு அறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே உயர்கல்வித்துறைக்கு 6,967 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதே சூளகிரியில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்லூரிகள்
200 கோடி ரூபாயில் 26 பாலிடெக்னிக் கல்லூரிகள், 56 கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் என பலவும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயனுள்ள ஒன்றாக அமையலாம்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
110 கோடி ரூபாயில் 4 - 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இதுபோன்ற அறிவிப்புகளுக்கு மத்தியில் மாணவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு எவ்வளவு?
ஆக மொத்தம் பள்ளிக் கல்வித்துறைக்கு 40,299 கோடி ரூபாய் தொகையானது ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்.
இளைஞர்களின் திறனை அதிகரிக்க அவர்களுக்கு இன்டர்ஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications