2025 முதல் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 9:30 மணியிலிருந்து தமிழக மக்களுக்கு தேவைப்படும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
"தாயுமானவர் திட்டம்" என்பது தமிழக அரசின் ஒரு முக்கியமான சமூக நலத்திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து.. அவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்குவதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். தனது உரையின் போது தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான மட்சுவோ பாஷோவின் அழகான கவிதை வரியோடு ஒப்பிட்டு பேசியிருந்தார்.

பூவிதழ் எங்கும் பனித்துளிகள்
காற்றசைவில் வீழ்ந்திடாமல்.
மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்
--மட்சுவோ பாஷோ
இந்தக் கவிதை இயற்கையின் படைப்புகளுக்கு இடையே உள்ள ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. ஏனெனில் பூக்களின் இதழ்களில் பனித்துளிகள் இருக்கும். என்னதான் காற்று வீசினாலும் இந்த பனித்துளிகள் பூக்களில் இருந்து விழாமல் இருக்கும். அதே போல தான் மனிதர்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர். எனவே இயற்கையை உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி கொண்டுவரப்பட்டது தான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்று கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் தங்களுடைய இரு பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் தங்கள் கல்வியை நிதி இல்லாமல் இடைநிறுத்தாமல் இருக்க மாதம் 2000 உதவி தொகை வழங்கப்படும். இது அவர்கள் 18 வயதை அடையும் வரை வழங்கப்படும்.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர்கள், ஒற்றைப் பெற்றோரை கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் என சமூகத்தில் வறிய நிலையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தற்போது 50,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தங்கள் இரு பெற்றோர்களையும் இழந்து தவிப்பது தெரியவந்துள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இரண்டுமே முக்கியம். சிறுவயதில் தங்களை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் போகும் சூழலில் எத்தனையோ குழந்தைகள் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதனால் அவர்களுடைய கல்வி தடைபட்டு போகிறது. இது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க இந்தத் திட்டம் கண்டிப்பாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications