இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க மிக முக்கியமான காரணம் ஃபாக்ஸ்கான். இந்த நிலையில் பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்யவும், இந்தியாவின் உற்பத்தி தளமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதாக தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள விடுதியைத் திறந்து வைக்க ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகிறார். இந்த திறப்பு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.
ஐபோன் விற்பனை செய்யும் ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கானில் பணிபுரியும் 18,720 பெண்களுக்கான வீட்டு வசதியை தமிழக அரசு நாளை திறந்து வைக்க உள்ளது. சென்னை அருகே உள்ள வல்லம் வடகலில் அமைந்துள்ள இந்த திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனத்திற்காக ஒரு மாநில அரசு இத்தகைய விடுதி வசதியை கட்டமைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும்.

இத்தகைய மாடல் சீனா மற்றும் வியட்நாம் வாட்டில் மாபெரும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முன்மாதிரியாக கொண்டு தான் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆனால் அதுமட்டும் அல்லாமல் தமிழக அரசே இந்த 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வளாகத்தை இயக்கி, பராமரிக்க உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். தைவான் நாட்டில் இருந்து இந்தியா வந்த லியு புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிறுவனத்தின் இந்திய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
2020 ஆம் ஆண்டு, தமிழக அரசு ரூ.706.5 கோடி செலவில் இந்த தொழிலாளர் குடியிருப்பு வசதியை அமைக்க அனுமதி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 20 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 3,120 வீடுகளைக் கொண்ட இந்த திட்டத்தில் சுமார் 18,720 தொழிலாளர்கள் தங்க வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பல தொழிலாளர் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இது பல்வேறு கட்டங்களில் இருப்பதாக உள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் திட்டம் தான் மிகப்பெரியது, ஆனால் சிறிய திட்டங்களும் உள்ளன. உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஒரு தொழிலாளர் குடியிருப்பு திட்டம் உள்ளது. இது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் லியுவின் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். பாக்ஸ்கான் இந்தியாவில் ஐபேட் உற்பத்தியைத் தொடங்குவது மட்டுமல்லாமல், AI சர்வர்கள் போன்ற புதிய தயாரிப்பு பிரிவுகளையும் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதை தொடந்து தமிழ்நாட்டில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications