தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென நீண்ட நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன. தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டங்களின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக ஓய்வூதிய தொகை தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய மாற்றம் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மாநில அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் ஓய்வு பெறும் போது, அவர்கள் அந்த பதவிக்காக பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையாக கிடைக்கும்.
உதாரணமாக 50,000 ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தால் 25,000 ரூபாய் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையாக கிடைக்கும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு , ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 50 சதவீதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
ஒருவேளை ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும் அல்லது பணி காலத்தில் இறக்க நேரிடும் போதும் அவர் அவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணி காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவார்கள். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13,000 கோடி அளிக்க வேண்டும் இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ,000 கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த பங்களிப்பு தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும் என முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

நம்ம கடலூர் சில்வர் கடற்கரையா இது? அடையாளமே தெரியாம மாறி போச்சே!! மக்கள் இனிமே படையெடுக்க போறாங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications