சென்னை: விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் பல மாற்றங்களை செய்வது வந்தாலும், தமிழ்நாட்டின் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் பரந்தூர் திட்டத்தை தொடர்ந்து முடக்கியே வைத்துள்ளது.
இந்த நிலையில் விமான போக்குவரத்தை எளித்தாக்க விமான இயக்கத்தின் முக்கிய செலவாக இருக்கும் ATF எனப்படும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைக்க முடிவு செய்துள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு விமான எரிபொருள் மீது 29 சதவீத வரி விதிக்கப்படுகிறது, இதை நாட்டின் பிற மாநிலங்களுக்கு குறிப்பாக அண்டை மாநிலங்களுக்கு இணையாக வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் சென்றுவிட்ட நிலையில், எரிபொருள், மதுபானம் போன்றவை மட்டுமே மாநில அரசால் வரி நிர்ணயம் செய்து வருமானம் பெறுகிறது.
இதனால் ATF மீதான தற்போதையை 29 சதவீத வாட் வரியை எவ்வளவு குறைக்கப்படும் என்பதை ஆய்வு செய்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசு பல மாதங்களாக தமிழ்நாடு அரசை விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க கோரி வந்தது, விமான இயக்கத்தின் பெரும் செலவு விமான எரிபொருள் என்பதால் வரி குறைப்பதன் மூலம் விமானங்கள் லாப கரணமாகவும் குறைந்த கட்டணத்திலும் இயங்க வழிவகுக்கும்.
சமீபத்தில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் வாட் வரியை 18, 28 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளது. டெல்லி அரசு இந்த வரி குறைப்பு 6 மாதம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதேவேளையில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவில் விமான எரிபொருளுக்கு 1 சதவீதம் மட்டுமே வாட் வரி, புதுச்சேரியில் 14.5 சதவீதம், தெலுங்கானாவில் 16 சதவீதம், கர்நாடகாவில் 18 சதவீதம், கேரளாழில் 5 சதவீதம் விற்பனை வரியும், 1 சதவீதம் செஸ் விதிக்கப்படுகிறது. மேலும் கேரள அரசு தனது 4 முக்கிய விமான நிலையத்தில் 1 சதவீதம் வரி, 1 சதவீதம் செஸ் வசூலிக்கிறது.
இந்த நிலையில் தான் மற்ற மாநிலங்களுக்கு இணையாக விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க விஜய் தலைமையிலான அரசு முடிவை எடுத்துள்ளது, இதேபோல் வரி குறைப்பு மூலம் ஏற்படும் வருவாய் பாதிப்பை தமிழ்நாடு அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது அடுத்த முக்கிய பிரச்சனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications