தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரான ஜிதன் ராம் மாஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்போது வழங்கப்படும் "பிரதான் மந்திரி விஸ்வகர்ம கர்மா யோஜனா" (PM விஸ்வகர்ம யோஜனா) திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். கைவினை கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அனைத்து சமூகத்தினரையும் ஆதரிக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதுவதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் முன்னேற்றம், தொழில் முனைவோர்களுக்கான உதவி என நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் எண்ணற்ற சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அப்படி அரசால் வழங்கப்படும் ஒரு திட்டம்தான் "பிரதான் மந்திரி விஸ்வகர்ம கர்மா யோஜனா". இந்தத் திட்டத்தின் மூலம் எந்த வித பிணையமும் இல்லாமல் மத்திய அரசின் மூலம் கடன் பெறலாம். இதை விட சிறப்பம்சம் என்னவென்றால் கடனுக்கான வட்டி வெறும் 5 சதவீதம் மட்டுமே. இந்த பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான கடனை பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். இதை 18 மாதங்களுக்குள் சரிவர திருப்பி செலுத்தி விட்டால் விண்ணப்பதாரர் மீண்டும் விண்ணப்பித்து ரூ.2 லட்சம் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற வரம்பு உள்ளது. அதாவது துடைப்பம் செய்பவர், கொல்லர்கள், கூடை பின்னுபவர், தச்சர்கள், பாய் செய்பவர்கள், காலனி செய்பவர்கள், படகு செய்பவர்கள், பொம்மை செய்பவர்கள் போன்ற கைவினை கலைஞர்கள் மட்டும்தான் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் தற்போதைய அமைப்பு ஜாதியின் அடிப்படையில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு தனது சொந்த திட்டத்தை உருவாக்கும் என்றும், இது மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதான் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து மாநிலத்தில் உள்ள நியமிக்கப்பட்ட குழுவின் விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் முன்மொழியப்பட்ட ஒரு சில முக்கிய மாற்றங்களில் ஒன்று விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான கட்டாய தேவையை நீக்குவதாகும். அதற்கு பதிலாக பட்டியலிடப்பட்ட தொழிலை தொடரும் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதோடு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 35 ஆக உயர்த்தவும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது. அதோடு பயனாளிகள் குறித்த சரிபார்ப்பை செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக வருவாய்த்துறையைச் சேர்ந்த விஏஓ இது போன்ற விஷயங்களை கையாள வேண்டும் என்று அரசு பரிந்துரைத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications