புதுசா வீடு கட்டப்போறீங்களா.. தமிழ்நாடு கொண்டு வந்துள்ள புதிய மாற்றம்.. மக்களுக்கு ஜாக்பாட்..!

சென்னை: தமிழக அரசு, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில், பல்வேறு புதிய வீட்டுவசதித் திட்டங்களை அறிவித்துள்ளது. தூண்கள் (Stilt) மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட வீடுகளுக்கான சுய-சான்றிதழ் (self-certification) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே செய்ய நடைமுறையில் உள்ள ஒற்றைச் சாளர அனுமதி முறை தரை மற்றும் ஒரு தளம் கொண்ட வீடுகளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த விரிவாக்கம் மேலும் பல குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுசா வீடு கட்டப்போறீங்களா.. தமிழ்நாடு கொண்டு வந்துள்ள புதிய மாற்றம்.. மக்களுக்கு ஜாக்பாட்..!

சுய-சான்றிதழ் முறை மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி முறையின் மூலம், வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவது மிகவும் எளிதாகும். அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு அடிக்கடி அலைய வேண்டிய சிரமம் குறையும்.

இதை தொடர்ந்து 2,500 சதுர அடி மனைப்பிரிவுகளுக்கான மாதிரி வீட்டு வரைபடங்களை வெளியிடவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி வரைபடங்கள், வீடு கட்டும் நடைமுறையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், கட்டுமானச் செலவையும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் தரமான வீடுகளைக் கட்டுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த மாற்றங்களை சாமானிய மக்களுக்கு மட்டும் அல்லாமல், குடிசைத் தொழில்கள் (Cottage Industries) மற்றும் பசுமை தொழிற்சாலைகளும் (Green Factories) பயன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சிறு தொழில் முனைவோர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொழில் மற்றும் வீட்டுவசதி ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் அரசின் இந்த முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் வீட்டுவசதி தொடர்பான விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்களில் வீடு கட்டுவது எளிதாகும். குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத மனைகளில் அக்டோபர் 2016-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

இது, நீண்ட காலமாக தங்கள் நிலங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்திருந்த பல கிராமப்புற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அவர்களின் சொத்துக்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைப்பதோடு, வங்கியில் கடன் பெறவும் வாய்ப்பு அளிக்கும்.

கிராமப்புற விதிமுறைகள் தளர்த்தப்படுவதன் மூலம், கிராமங்களில் புதிய வீடுகள் கட்டப்படுவது அதிகரிக்கும். இது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். நீண்ட காலமாக அங்கீகாரம் கிடைக்காத நிலங்களுக்கு தற்போது அங்கீகாரம் கிடைப்பதால், அந்த நிலங்களின் மதிப்பு அதிகரிக்கும்.

இதற்கிடையே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), திருவள்ளூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிய நிலத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கான வாடகை வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு ஒரு நிலையான தீர்வாக அமையும். ஈரோட்டில் அரசு அதிகாரிகளுக்கான வாடகை வீடுகள் கட்டப்படுவதால், அவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான குடியிருப்பு வசதி கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+